திருநெல்வேலி ஸ்டைலில் கோழிக்குழம்பு... ஒருமுறை செய்ங்க.. திரும்பத் திரும்ப செய்வீங்க...!

Chicken Kulambu Recipe : இந்த கட்டுரையில் திருநெல்வேலி ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

tirunelveli style chicken kulambu recipe in tamil mks

திருநெல்வேலி என்றாலே நம் அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது அல்வா தான். ஆனால், அங்கு அல்வா மட்டுமல்ல சிக்கன் குழம்பும் தான் பிரபலம். திருநெல்வேலி ஸ்டைல் சிக்கன் குழம்பு மசாலா அரைத்து செய்யப்படுகிறது. இதனால் இந்த குழம்பு சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபமாக இருக்கும். ஒரு முறை இந்த ஸ்டைலில் 
உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சிக்கன் குழம்பு செய்து கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் திருநெல்வேலி ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  டேஸ்ட்டான கேரளா ஸ்டைல் கோழிக்கறி குழம்பு.. ரெசிபி இதோ!

திருநெல்வேலி ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ
தேங்காய் - 1/4 கப் (துருவியது)
சின்ன வெங்காயம் - 12
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
பிரியாணி இலை - 2
சோம்பு - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  நாவில் எச்சில் ஊறவைக்கும் கிரீன் சிக்கன் கிரேவி.. ரெசிபி இதோ!

செய்முறை:

திருநெல்வேலி ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்ய முதலில், எடுத்து வைத்த சிக்கனை நன்றாக கழுவி, ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு, பிறகு ஒரு தட்டை கொண்டு பாத்திரத்தை மூடி சிக்கனை ஊற வையுங்கள்.

இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து அடுப்பை குறைவான தீயில் வைத்து, நன்கு வதக்கி கொள்ளுங்கள். பிறகு அதை அடுப்பில் இருந்து கீழே இறக்கி ஆற வைக்கவும். பின் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து ஒரு கடைய அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளுங்கள். பிறகு அதில் கருவேப்பிலையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின் அதில் சிக்கன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஒரு ஐந்து நிமிடம் கிளறி விடுங்கள். 

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும் மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் திருநெல்வேலி ஸ்டைலில் சிக்கன் குழம்பு தயார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios