சுருக்கம்
சர்க்கரைவல்லி கிழங்கை வேக வைத்து, பொரியல் செய்து சாப்பிட்டு தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் சர்க்கரைவல்லி கிழங்கி பயன்படுத்தி ஆரோக்கியம் தரும் அடை செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? சர்க்கரைகிழங்கு சீசனில் வாங்கி, ஒருமுறை இந்த அடை செய்து பாருங்க. அதன் சுவையில் மனதை பரிகொடுத்து விடுவீர்கள்.
நாம் அனைவரும் ஆரோக்கியமான மற்றும் நச்சுச்சத்து இல்லாத உணவுகளை நம்முடைய காலை உணவாக தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில், சர்க்கரைவல்லிக் கிழங்கு என்பது சத்தானது, சுவையானது, மற்றும் எளிதாக செய்யக்கூடிய சிறந்த உணவாகும். இதில் அடை செய்து சாப்பிட்டு பாருங்கள் அமோகமாக இருக்கும். இந்த அடை, காரப்பருப்புக் குழம்புடன் செம காம்போவாக இருக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து , வைட்டமின்கள், மற்றும் மினரல்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். வீட்டிலேயே சுவையான சர்க்கரைவல்லிக் கிழங்கு அடை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சர்க்கரைவல்லி கிழங்கு – 1 பெரிய துண்டு (அரைத்தது)
பச்சரிசி – 1 கப்
துவரம் பருப்பு –1/4 கப்
உளுந்து பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வறுத்த மிளகாய் – 3
பூண்டு பற்கள் – 3
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி – சிறிதளவு
சோம்பு -1/2 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – அடை பொரிப்பதற்காக
உங்கள் குழந்தை அதிக நேரம் மொபைல் பார்க்கிறதா?...கட்டுப்படுத்த இதை செய்து பாருங்க
செய்முறை :
- அடை மாவு தயாரிக்க முதலில், பச்சரிசி, துவரம் பருப்பு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை 4 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.
- சர்க்கரைவல்லி கிழங்கை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக வேகவைத்து மென்மையாக அரைக்கவும்.
- ஊறிய பருப்புகள் மற்றும் அரிசியை வறுத்த மிளகாய், பூண்டு, சோம்பு, உப்பு சேர்த்து கெட்டியான பதத்திற்கு அரைக்கவும்.
- அதில் சர்க்கரைவல்லிக் கிழங்கு பேஸ்ட், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- தோசைக் கல்லை சூடாக்கி, மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்.
- மாவை கரண்டியால் எடுத்துக் கொண்டு, அடையாக பரப்பி, நடுவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.
- அடை ஒருபுறம் சிவப்பு நிறமாகும் வரை பொரித்து, பின்னர் திருப்பிப் போட்டு மற்றொரு பக்கத்தையும் நன்றாக பொரிக்க வேண்டும்.
- இரண்டு பக்கமும் குறைந்த தீயில் வைத்து சுட்டு எடுக்க வேண்டும்.
- சூடாக இருக்கும்போதே வெந்தயம் சாம்பார், வெங்காய துவையல், கார சட்னி அல்லது தயிர் உடன் பரிமாறலாம்.
- மேலும் சுவையாக உண்ண ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்தால், சிறந்த ருசியைக் கொடுக்கும்.
கூடுதல் சுவைக்கு டிப்ஸ் :
- சர்க்கரைவல்லி கிழங்கை நேரடியாக அரைக்காமல், முதலில் வேகவைத்து அரைத்தால், அடையின் அடர்த்தி மிதமாக இருக்கும்.
- மாவே ஒரு நாளுக்கு ஊற வைத்தால், மேலும் நன்றாக பொரியும்.
- மிகுந்த எண்ணெய் தேவைப்படாது, லேசாக விட்டு, மென்மையாகவே செய்யலாம்.
- சாம்பார் தூள் அல்லது மிளகாய் தூள் சேர்த்தால், இன்னும் அதிகமான சுவை கிடைக்கும்.
தினமும் தவறாமல் இதுக்கு டைம் ஒதுக்குங்க.. உடம்புக்கு ரொம்ப நல்லது.. மனசுக்கும் தான்!
ஆரோக்கிய நன்மைகள்:
- சர்க்கரைவல்லிக் கிழங்கு மற்றும் பருப்பு சேர்க்கப்பட்டதால், இது செரிமானத்திற்கு நன்றாக உதவுகிறது.
- இதில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் காலை உணவாக உண்பவர்களுக்கு தினசரி ஆற்றலை தரும்.
- சர்க்கரைவல்லிக் கிழங்கில் உள்ள மிதமான கார்போஹைட்ரேட்டுகள் நீர் இன்சுலின் கட்டுப்பாட்டை மேம்படுத்தும்.
- இதில் உள்ள நல்ல கொழுப்பு இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.