Asianet News TamilAsianet News Tamil

வெறும் 3 பொருளில் இந்த ரெசிபியை சட்டென்று செய்யலாம் வாங்க!

நீர் உருண்டை என்றழைக்கப்படும் நீர் கொழுக்கட்டையை தான் இன்று நாம் பார்க்க உள்ளோம். பொதுவாக கொழுக்கட்டை போன்றவற்றை நாம் தெய்வத்திற்கு வைத்து படைப்போம். இதனை சிற்றுண்டியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

How to make Water Kozhukattai in Tamil
Author
First Published Dec 9, 2022, 8:51 PM IST

பள்ளி முடித்து டயர்டாக வரும் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு உணவு வகையை தான் இன்று நாம் காண உள்ளோம். என்ன ரெசிபியாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? 

நீர் உருண்டை என்றழைக்கப்படும் நீர் கொழுக்கட்டையை தான் இன்று நாம் பார்க்க உள்ளோம். பொதுவாக கொழுக்கட்டை போன்றவற்றை நாம் தெய்வத்திற்கு வைத்து படைப்போம். இதனை சிற்றுண்டியாகவும் எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் இன்று நாம் அசத்தலான சுவையில், ஆரோக்கியமான இனிப்பு வகையான இந்த நீர் கொழுக்கட்டையை செய்து பார்க்கலாம் வாங்க.

வீட்டில் இருக்கும் வெறும் மூன்றே பொருள்களில் சட்டென்று இந்த ரெசிபியை எளிமையாக செய்யலாம். எண்ணெய் இல்லாமல் செய்யப்படும் இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு உணவு ஆகும். அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த கொழுக்கட்டையை உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்

வாருங்கள்! ருசியான நீர் உருண்டையை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் முலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு-1 கப் 
வெல்லம்-1/4 கப் 
உப்பு -தேவையான அளவு

ஆரோக்கியம் நிறைந்த க்ரிஸ்பி "கோதுமை வடை"! செய்வது எப்படி?

செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் 1 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றிக் கொண்டு அதில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீரை கொதிக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆர்மபித்த உடன்,அதில் ஒரு கப் அரிசி மாவு சேர்க்க வேண்டும். அதை கரண்டி வைத்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். மாவு திரண்டு வரும் நேரத்தில் அடுப்பினை ஆஃப் செய்து விட வேண்டும். 

மாவு கொஞ்சம் வெது வெதுப்பாக இருக்கும் போது ,கைகளால் சாஃப்டாக பிசைந்து கொள்ள வேண்டும். பின் மாவினை அதனை சிறு சிறு உருண்டைகளாக ஒரே வடிவில் உருட்டிக் கொள்ள வேண்டும். 

வெல்லத்தை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை அரிசி மாவு உருண்டைகளில் நடுவே ஒரு சின்ன ஹோல் செய்து இந்த வெல்லத்தை சிறிது வைத்து மூடி விட வேண்டும். இதே மாதிரி எல்லா உருண்டைகளையும் செய்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். இட்லி தட்டுகளின் மீது இந்த உருண்டைகளை வைத்து, . இட்லி பாத்திரத்தில் வைத்து சுமார் 10 நிமிடம் வரை வேக விட்டு இறக்கினால் சுவையான நீர் உருண்டை ரெடி!!! நீங்களும் இதனை ஒரு முறை ட்ரை பாணி பாருங்க... 

Follow Us:
Download App:
  • android
  • ios