Asianet News TamilAsianet News Tamil

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் கேழ்வரகு கூழ் !

பல்வேறு ஆரோக்கிய நலன்களை அள்ளித்தரும் கேழ்வரகு வைத்து சத்தான அதே நேரத்தில் ருசியான கேழ்வரகு கூழ் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

A Healthy Finger Millet Porridge Recipe in Tamil
Author
First Published Mar 12, 2023, 3:27 PM IST

கோடை வெயில் ஆரம்பமாகி விட்டது. இந்த சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள பல்வேறு விதமான குளிர்ச்சி அளிக்கக்கூடிய உணவுகளை நாம் எடுத்துக் கொள்வோம். அதனால்தான் வெயில் நாட்கள் ஆர்மபித்தாலே கூழ் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. வெயில் காலங்களில் பல கோவில்களிழும் கூழ் காய்ச்சி மக்களுக்கு வழங்குவார்கள். வெயில் நேரங்களில் உடல் சூட்டை தணிக்க கூழ் பெரிதும் உதவுகிறது. அத்திலும் குறிப்பாக கேழ்வரகு கூழ் வெயிலின் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது.

ஆகையால் தான் கிராமங்களில் இன்று வயல் வேலைக்கு செல்பவர்கள் கேழ்வரகு கூழை முக்கிய உணவாக எடுத்துக் கொண்டு போகிறார்கள். கேழ்வரகில் அதிகளவு இரும்பு, நியாசின், தையமின், கால்சியம்போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுகிறது. தவிர உடலுக்கு தேவையான வலுவை தருகிறது, மேலும் உடலைக் குளிர்ச்சியாக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு அரு மருந்து என்றே சொல்ல வேண்டும். இந்த கூழைக் குடித்து வர விரைவில் எடை குறையும்.

இதிலுள்ள நார்ச்சத்து நமது உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை மட்டுப்படுத்தி எடையை குறைக்க செய்கிறது. மேலும் சர்க்கரை நோயையும் கட்டுக்குள் வைக்க உதவும். அதோடு இதய நோய்கள் வராமல் தடுக்கும் பணியையும் செய்கிறது இந்த கேழ்வரகு கூழ் .
இன்னும் பல்வேறு ஆரோக்கிய நலன்களை அள்ளித்தரும் கேழ்வரகு வைத்து சத்தான அதே நேரத்தில் ருசியான கேழ்வரகு கூழ் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

முடிஉதிர்வை நிறுத்தி, இளநரையை மறைத்து கருமையா காடு மாதிரி முடி வளரனுமா ? இந்த 1 ஜூஸ் குடிங்க போதும்!

தேவையான பொருட்கள் :

ராகி - 1 கப்
வரகு அரிசி - 1/4 கப்
தயிர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி 8 மணி வைப்பதால் கூழின் சுவை மிகுதியாக இருக்கும்.அந்த மாவினை தண்ணீரோடு அப்படியே குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் வரகு அரிசியையும் சேர்த்து,சிறிது உப்பு சேர்த்து மேலும் 2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து குக்கரை மூடிவிட்டு சிம்மில் வைத்து விட வேண்டும் .

3 விசில் வைத்து வேக வைத்த பின் அடுப்பில் இருந்து இறக்கி விட்டு பிரெஷர் முற்றிலும் போன பிறகு குக்கரை திறக்க வேண்டும். இப்போது மத்து கொண்டு நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். இப்போது தயிரை கடைந்து தண்ணீர் ஊற்றி மோர் செய்து கொள்ள வேண்டும். கடைந்த மோரினை குக்கரில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். விருப்பமிருந்தால் பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் சேர்க்கலாம். அவ்ளோதான் சூப்பரான சத்தான கேழ்வரகு கூழ் ரெடி! இதற்கு ஊறுகாய், மோர் மிளகாய், வத்தல் (வடாம்) போன்றவையை வைத்து சாப்பிடலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios