Asianet News TamilAsianet News Tamil

Beauty tips for Face: பட்டுப்போல முகத்தில் முத்துப்போல பருக்கள்.. பட்டுன்னு போக நச்சுன்னு 4 டிப்ஸ்!!

பளிச் என்று இருக்கும் முகத்தில் ஆங்காங்கே முத்து முத்தாக பருக்கள் வந்து பாடாய் படுத்தும். இப்படி பரு வந்திருக்கே என்ன செய்வது என்று ஒருவித மன உளைச்சலுடனே இன்றைய இளம் தலைமுறையினர் அதைப்பற்றிய நினைப்பாகவே இருப்பார்கள். எண்ணெய் பலகாரங்களை சாப்பிடாமல் கூட தியாகம் செய்தும் பரு போகவில்லையே என்ற கவலை வாட்டி எடுக்கும். டோண்ட் ஒர்ரி யூத்ஸ்.. உங்களுக்காகவே சில வீட்டு ரெமிடீஸ் இருக்கு.. ரொம்ப செலவு செய்யாதீங்க ஈஸியா எந்த பக்க விளைவும் இல்லாமல் முகப்பருக்களை போக்கலாம்.

Beauty tips news tamil: how to removes pimples check the home remedies
Author
First Published Jul 23, 2024, 2:28 PM IST | Last Updated Jul 23, 2024, 2:29 PM IST

கிச்சனில் மருந்து இருக்கு
நம்முடைய வீட்டு கிச்சனில் உள்ள பொருட்களை வைத்தே நாம் முகப்பருக்களை எளிதாக போக்கலாம். எண்ணெய் பசை அதிகம் உள்ள சருமத்திற்கு முகப்பருக்கள் அதிகம் வரும் எனவே சருமத்தில் உள்ள அதிக எண்ணெய் பசையை கட்டுப்படுத்த வேண்டும். முகத்தை நன்றாக கழுவி துடைத்து விட்டு இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் எடுத்து அதனை முகத்தில் நன்றாக பூசி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாவை அழிக்கலாம். விளக்கெண்ணெயில் முகப்பருவை அழிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

விளக்கெண்ணெய் மசாஜ்
சிலருக்கு முகத்தில் தடிப்புகள், அலர்ஜியால் பாதிப்புகள் வரலாம். அவர்களுக்கு விளக்கெண்ணெய் சரியான தீர்வு. தடிப்புகள், அலர்ஜி, பூஞ்சைத்தொற்று போன்றவைகளை விளக்கெண்ணெய் சரிப்படுத்தும். சிலருக்கு முகம் கழுத்து பகுதியில் முதுகுப்பகுதியில் பரு இருக்கும். இது சில நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்தும். பருவை நீக்கும் அருமருந்து விளக்கெண்ணெய். ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் எடுத்து அதில் சுத்தமான பஞ்சு கொண்டு தொட்டு நம்முடைய  முகம், கழுத்து பகுதியில் நேரடியாக தடவி 5 நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர் நன்றாக மசாஜ் செய்து ஃபேஸ் வாஷ் மூலம் கழுவி விட பருக்களின் தாக்கம் படிப்படியாக குறையும்.

வயசு 20.. ஆனா பார்ப்பதற்கு வயசான மாதிரி தெரிறீங்களா..? காரணம் 'இந்த' நாலுல ஏதாவது ஒன்னு தாங்க..

சாப்பிடவே சாப்பிடாதீங்க
முகத்தில் அதிகம் எண்ணெய் வடிந்தால் நாம் அதிக இனிப்பு, எண்ணெய்யில் பொரித்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதே போல அதிகமாக மேக்அப் போடக்கூடாது. மன அழுத்தம், மன இறுக்கம் இருந்தாலும் அதிக அளவில் எண்ணெய் பசை சுரக்கும். எனவே மனதை லேசாக வைத்துக்கொள்ளவும். தியானம் செய்வதன் மூலம் முகம் பொலிவடையும். புன்னகையோடு இருங்கள் மன அழுத்தம் குறையும் செயற்கை மேக் அப் எதுவும் இல்லாமல் முகமும் பளிச்சென்று இருக்கும்.

பால் + கடலை மாவு
பாலேடு எடுத்து முகத்தில் பூசி ஊறவைத்து பின்னர் துடைத்து எடுக்கலாம் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவலாம். கடலை மாவுடன் காய்ச்சி ஆற வைத்த பசும்பால் கலந்து பேக் போல செய்து முகத்தில் பூசி குளிக்கலாம். கை கால்கள் முகத்திலும் பூசி குளிக்க சருமம் மென்மையாகும் பருக்கள் படிப்படியாக குறைந்து பளிச் என்று மாறும்.

பச்சை பாலில் இந்த மூணுல ஏதாவது ஒன்னு கலந்து யூஸ் பண்ணுங்க.. முகம் பளபளப்பாகுமாம்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios