- Home
- உலகம்
- தலைவன் இப்படி கிளம்பிட்டாரே... எனக்கு நோபல் பரிசு கொடுத்துடு..! நார்வே அமைச்சருக்கு டிரம்ப் மிரட்டல்..!
தலைவன் இப்படி கிளம்பிட்டாரே... எனக்கு நோபல் பரிசு கொடுத்துடு..! நார்வே அமைச்சருக்கு டிரம்ப் மிரட்டல்..!
அமெரிக்க அதிபர் டிரம்ப் நோபல் பரிசுக்காக மிகவும் ஆசைப்பட்டு, நோர்வே நிதியமைச்சரை தொலைபேசியில் மிரட்டியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நோபல் பரிசுக்காக மிகவும் ஆசைப்பட்டு, நோர்வே நிதியமைச்சரை தொலைபேசியில் மிரட்டியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
நார்வேயின் வணிக செய்தித்தாளான டேஜென்ஸ் நாரிங்ஸ்லிவ், டொனால்ட் டிரம்ப் நாட்டின் நிதியமைச்சரை தொலைபேசியில் மிரட்டியதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‘‘அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படாவிட்டால், நார்வே மீது கடுமையான வரிகளை விதிப்பேன்’’ என மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் நோர்வே நிதியமைச்சரை அழைத்து வரிகள் குறித்து விவாதிக்க அழைத்திருந்தார். அப்போது, அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
இஸ்ரேல், பாகிஸ்தான், கம்போடியா உள்ளிட்ட சில நாடுகள் அமைதி ஒப்பந்தங்கள், போர்நிறுத்தங்களை கொண்டு வந்ததற்காக டிரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளன. இது குறித்து டொனால்ட் டிரம்ப், "வெள்ளை மாளிகையில் தனது நான்கு முன்னோடிகளுக்கு வழங்கப்பட்ட நோர்வே வழங்கிய மரியாதைக்கு தான் தகுதியானவன்" என்று கூறியுள்ளார்.
நார்வே செய்தித்தாளில், ‘‘அமெரிக்க அதிபர் டிரம்ப் நார்வேயின் நிதியமைச்சரை அழைத்து, அமைதிக்கான நோபல் பரிசை விரும்புவதாக நேரடியாக அழைப்பு வந்ததாகத் தெரிவித்துள்ளது. இது அங்கு தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. அப்போது ர் நோபல் பரிசு கேட்டு ட்ரம்ப் மிரட்டினார். அமெரிக்காவிற்கும், நார்வேக்கும் இடையே வரி, பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. ஆனால், திடீரென்று டிரம்ப் விஷயத்தை மாற்றி அமைதிக்கான நோபல் பரிசுக்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார். நார்வே அமைச்சருடனான பேச்சுவார்த்தையின் போது அவர் நோபல் பற்றி குறிப்பிடுவது இது முதல் முறை அல்ல’’ என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, டிரம்ப் சமீபத்தில் நோர்வேயில் இருந்து வரும் இறக்குமதிகளுக்கு 15% வரி விதிக்க அறிவித்தது. இது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மத்திய கிழக்கு, இந்தியா-பாகிஸ்தான், கம்போடியா போன்ற நாடுகளில் அமைதி ஒப்பந்தங்கள் அல்லது போர்நிறுத்தங்களை ஏற்படுத்துவதில் தான் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும், எனவே அவர் நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்றும் டிரம்ப் ஏற்கனவே பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
அவரது ஆதரவாளர்கள் பல நாடுகளில் இருந்தும் அவரை பரிந்துரைத்து வருகின்றனர். நான்கு அமெரிக்க அதிபர்கள் நோபல் பரிசைப் பெற்றுள்ளனர். எனவே அவரும் அதைப் பெற வேண்டும் என்று டிரம்ப் அடிக்கடி வாதிட்டு வருகிறார். நோபல் பரிசு நார்வேயால் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், விருதை யார் பெறுவார்கள் என்பதை ஒரு குழு தேர்ந்தெடுக்கிறது.