கல்யாணம் பண்ணா மட்டும் போதும்; அரசே உங்களுக்கு 12 லட்சம் கொடுக்கும் - இது எங்க?
திருமணமான தம்பதியருக்கு ரூ.12 லட்சம் வழங்கும் நாடு ஒன்று உள்ளது. இங்கு திருமணத்திற்கு மட்டுமல்ல, திருமணத்திற்கு முன்னும் பின்னும் தேவையான நிதி உதவி கிடைக்கிறது. அந்த நாடு பற்றி இங்கே பார்க்கலாம்.

Government Give 12 Lakh Rupees to Newly Married Couples
கடன் வாங்கியாவது ஆடம்பரமாக திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் இந்தியர்கள், திருமணத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கின்றனர். திருமணத்திற்காக கடன் மேல் கடன் வாங்குகின்றனர். திருமணத்திற்கு முன்னும் பின்னும் அதிக பணத்தை செலவு செய்கின்றனர். உறவினர்கள், நண்பர்களிடம் பாராட்டைப் பெற வேண்டும் என்பதற்காக திருமணத்திற்கு தடபுடலாக செலவு செய்து பின்னர் கஷ்டப்படுகின்றனர். இந்த திருமணக் கடன் பெற்றோருக்கோ அல்லது புதுமணத் தம்பதியருக்கோ சுமையாகிறது. இந்தியாவில் நிலைமை இப்படி இருக்க, தற்போது நாம் பார்க்க உள்ள நாட்டில் நீங்கள் திருமணம் செய்தால் உங்கள் கணக்கில் ரூ.12 லட்சம் வந்து சேரும். கணக்கில் பணம் வருவது மட்டுமல்ல, திருமணத்திற்கு பின் தேனிலவுக்குத் தேவையான பணத்தையும் அரசாங்கமே வழங்குகிறது.
எந்த நாட்டில் ரூ.12 லட்சம் கிடைக்கும்?
தென் கொரியாவில், பிறப்பு விகிதம் மற்றும் மக்கள்தொகை குறைவு ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. மக்கள்தொகையை அதிகரிக்க அரசாங்கம் ஒரு தனித்துவமான முறையைப் பின்பற்றுகிறது. திருமணமான தம்பதியருக்கு அரசாங்கம் லட்சக்கணக்கான ரூபாய்களை வழங்குகிறது. திருமணத்திற்கு மட்டுமல்ல, டேட்டிங் முதல் நிச்சயதார்த்தம் மற்றும் தேனிலவு வரையிலான செலவுகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. நாட்டில் குறைந்து வரும் மக்கள்தொகையை அதிகரிப்பதே இதன் நோக்கம். இளைஞர்களை திருமணம் செய்ய ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும்.
தென் கொரிய அரசு நடத்திய சுயம் வரம் நிகழ்ச்சி
தென் கொரியாவின் புசான் மாவட்டத்தில் சிறப்பு சுயம் வரம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திருமணம் செய்து கொள்ளும் தம்பதியருக்கு அரசாங்கத்திடமிருந்து சுமார் $14,700 அதாவது சுமார் ரூ.12 லட்சம் கிடைக்கும். கடந்த ஆண்டு, புசானில் நடந்த நிகழ்ச்சியில் அரசாங்கம் புதுமணத் தம்பதியருக்கு ரூ.31 லட்சம் அதாவது 38000 டாலர்களை வழங்கியது. தென் கொரியா, உலகிலேயே மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தைக் கொண்ட நாடாகும். இங்கு பிறப்பு விகிதம் 2023 இல் 0.72 ஆக இருந்தது, இது 2024 இல் 0.75 ஆக சற்று அதிகரித்துள்ளது.
ஆனால் இது மிகவும் குறைவு. தென் கொரிய அரசாங்கத்திற்கு மக்கள்தொகையை அதிகரிப்பது அவசியமாகிறது. இதற்காகவே புதிய திட்டங்களைச் செயல்படுத்துகிறது. பணத்தைப் பார்த்தாவது இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அரசாங்கம் உள்ளது. இந்தத் திட்டம் மக்கள்தொகைக் கொள்கையின் ஒரு பகுதி என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிறப்பு விகிதக் குறைவு மற்றும் பிராந்திய மக்கள்தொகைக் குறைவு போன்ற கடுமையான பிரச்சினைகளைச் சமாளிப்பதே இதன் நோக்கம் என்றார்.
ஜப்பானிலும் இதே பிரச்சினை
தென் கொரியா மட்டுமல்ல, ஜப்பானும் மக்கள்தொகை நெருக்கடியை எதிர்கொள்கிறது. ஜப்பானின் பிறப்பு விகிதம் கடந்த 50 ஆண்டுகளைக் காட்டிலும் மிகக் குறைவாக உள்ளது. இங்கு ஆண்டுக்கு 50 லட்சம் பிறப்புகள் இருந்தன, அது இப்போது 7 லட்சத்து 60 ஆயிரமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், 2035 க்கு முன் ஜப்பான் மக்கள்தொகைப் பிரச்சினையைச் சமாளிக்கும் என்று அந்நாட்டு அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. அதனால்தான் ஜப்பானும் இளைஞர்களைத் திருமணம் செய்ய ஊக்குவிக்கிறது. கூடவே குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும் வலியுறுத்தி, இதற்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.