MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சுக்குநூறாய் உடையும் விஜயாவின் ஈகோ... வீட்டுக்கு கம்பேக் கொடுக்கும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சுக்குநூறாய் உடையும் விஜயாவின் ஈகோ... வீட்டுக்கு கம்பேக் கொடுக்கும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா வீட்டை விட்டு வெளியேறியதால் வீடே வெறிச்சோடி கிடக்கும் நிலையில், விஜயாவும் திடீரென மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 08 2026, 12:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 Siragadikka Aasai Serial unexpected twist
Image Credit : youtube/vijaytelevision

Siragadikka Aasai Serial unexpected twist

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டுள்ளார் விஜயா. முதலில் இதை நம்பாமல் இருந்த மீனா, ஒருகட்டத்தில் அண்ணாமலை விபத்தில் சிக்கியதால், அத்தை சொன்னதுபோல் தன்னால் மாமா உயிருக்கு ஆபத்து இருக்குமோ என பயந்து அந்த வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார் மீனா. ஏற்கனவே மனோஜும் ரோகிணியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மறுபுறம் ரவி உடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவரைப் பிரிந்து ஸ்ருதியும் தன் அம்மா வீட்டில் வாழ்கிறார். இதன் பின் என்ன நடக்கபோகிறது என்பதை பார்க்கலாம்.

24
தனிமையில் வாடும் விஜயா
Image Credit : youtube/vijaytelevision

தனிமையில் வாடும் விஜயா

மருமகள் வீட்டில் இல்லாததால் எல்லா வேலைகளையும் மகன்கள் தான் பார்க்கிறார்கள். ஒருநாள் பார்த்த நிலையில் மறுதினமே முத்து தான் மீனா உடன் தங்கப் போவதாக சொல்லிவிட்டு, முத்து கிளம்புகிறார். அதேபோல் ரவி தனது நண்பன் வந்திருப்பதால் நான் அவனுடனே தங்கிக் கொள்கிறேன் என சொல்லிவிட்டார். மறுபுறம் மனோஜ், தான் ஷோரூமிலேயே தங்கிக் கொள்கிறேன் என சொல்லி உள்ளார். இதுபோதாதென்று அண்ணாமலை, அவரது நண்பர் பரசு உடன் மாடியில் சென்று தூங்க உள்ளதாக சொல்லிவிடுகிறார். இதனால் விஜயா மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறார்.

Related Articles

Related image1
மீனாவுக்கு சவால்விட்ட ரோகிணி.... விசாரணையில் இறங்கும் முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Related image2
சிந்தாமணியால் சிக்கப்போகும் ரோகிணி... ஸ்ருதிக்கு வந்த டவுட் - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
34
பார்வதியை சந்தித்த விஜயா
Image Credit : youtube/vijaytelevision

பார்வதியை சந்தித்த விஜயா

மீனாவின் அருமை அவர் வீட்டில் இருந்தபோது விஜயாவுக்கு தெரியவில்லை. தற்போது அவர் இல்லாதபோது தான் அவரை நினைத்துப் பார்க்கிறார் விஜயா. அவர் இருந்தபோது வீடு எப்படி ஜே ஜேவென இருந்தது என நினைத்துப்; பார்த்து கண்கலங்குகிறார். வீட்டில் தனிமையில் இருப்பதால், ஒருமாதிரி இருப்பதால், தன்னுடைய தோழி பார்வதியின் வீட்டுக்கு செல்கிறார் விஜயா. அங்கு சென்றதும், அவரைப் பார்த்து நீ ஏன் டல்லா இருக்க என பார்வதி கேட்க, நேத்து நைட்டு வீட்டுல யாருமே இல்லை, நான் மட்டும் தனிமையில் இருந்தேன் என்று சொல்லி ஃபீல் பண்ணுகிறார் விஜயா.

44
தவறை உணரும் விஜயா
Image Credit : youtube/vijaytelevision

தவறை உணரும் விஜயா

இதற்கு காரணமே நீ தான விஜயா என பார்வதி சொல்ல, பழசையெல்லாம் யோசித்துப் பார்க்கும் விஜயா, ஒரு நாள் கூட என்னால வீட்ல தனியா இருக்க முடியல, நீ எப்படி இத்தனை வருஷமா தனியா இருக்க என பார்வதியிடம் கேட்கிறார். உன்னோட கஷ்டம் எனக்கு இப்பதான் புரியுது. வாழ்க்கையில் ரொம்ப கொடுமையானது தனிமை தான் என கூறும் விஜயா, அதை தான் நேற்று தான் அனுபவித்ததாக கூறுகிறார். இதையடுத்து என்ன ஆனது? மீனாவை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரப் போகிறாரா விஜயா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
பல்லவனை அரெஸ்ட் பண்ணிய போலீஸ்... தம்பியை காப்பாற்றினாரா சோழன்? அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
தேவசகாயம் ரிட்டர்ன்ஸ்..? ஜோடியாக ஆபத்தில் சிக்கும் ஜனனி - சக்தி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
Recommended image3
புதையல் நகையை கண்டுபிடித்த கார்த்திக்; லாக்கப்பிலிருந்து வெளியே வந்த ரேவதி;வீட்டிற்குள் விடாமல் தடுத்த கொடுமை - கார்த்திகை தீபம் ட்விஸ்ட்!
Related Stories
Recommended image1
மீனாவுக்கு சவால்விட்ட ரோகிணி.... விசாரணையில் இறங்கும் முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
சிந்தாமணியால் சிக்கப்போகும் ரோகிணி... ஸ்ருதிக்கு வந்த டவுட் - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved