MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சன் டிவி முக்கிய தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை ஷாமிலி! குழந்தை பிறந்தபின் இவ்வளவு குண்டா ஆகிட்டாங்களே..!

சன் டிவி முக்கிய தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை ஷாமிலி! குழந்தை பிறந்தபின் இவ்வளவு குண்டா ஆகிட்டாங்களே..!

கர்ப்பமானதால் 'ரோஜா' தொடரில் இருந்து விலகிய நடிகை ஷாமிலி சுகுமாரன் மீண்டும் தற்போது பிரபல சீரியலின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். 

2 Min read
manimegalai a
Published : Aug 10 2023, 12:35 AM IST| Updated : Aug 10 2023, 12:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சன் டிவியில் டாப் 5 TRP ரேட்டிங்கில் இடம் பிடித்து வரும் சீரியல்களில் ஒன்று 'வானத்தை போல'. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், கடந்த மூன்று ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் நடிகர் ஸ்ரீகுமார் மற்றும் மான்யா ஆனந்த் அண்ணன் - தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

உஷார்... கார் லோன் என்கிற பெயரின் வினோத மோசடி! காவல் ஆணையர் அலுவலகத்தில் சீரியல் நடிகை நிலானி பரபரப்பு புகார்!

24

சின்ராசு வாழ்க்கை சந்தோஷமாக துவங்கிய நேரத்தில், துளசி கர்ப்பமாக இல்லை என்பது அனைவர்க்கும் தெரிய வருகிறது. இதை தொடர்ந்து துளசியின் கணவரான ராஜபாண்டியும், மாமனார் சங்கரபாண்டியும் துளசியை வெறுக்கும் நிலையில்...  எப்படியும் துளசியை ராஜபாண்டியுடன் சேர்த்து வைக்க குடும்பமே போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் குழந்தையை துளசி தன்னுடைய அண்ணனுக்காக கலைத்து விட்டார் என நினைக்கும் ராஜபாண்டி எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் தன்னுடைய இஷ்டத்துக்கு வாயில் வந்ததெல்லாம் பேசி வருகிறார்.

34

மேலும் ஒரு கட்டத்தில் சாகலாம் என துளசி முடிவெடுக்க,  அவரை சமாதான படுத்தும் பொன்னி நீ உன்னுடைய அண்ணனுக்காக கண்டிப்பாக உயிருடன் இருக்க வேண்டும். என அழைத்து வருகிறார்.  இப்படி பரபரப்பான திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் தான், தற்போது  ரோஜா சீரியலில் இருந்து, கர்ப்பமானதால் பாதியிலேயே விலகிய ஷாமிலி, மீண்டும் குழந்தை பெற்ற பின்னர் கொஞ்சம் குண்டாக மாறி ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

விஷால் செய்த துரோகம்..! மனசு நொந்து போய் அப்பாஸ் கூறிய அதிர்ச்சி தகவல்..!

 

44

துளசியின் மூலம் ஷாமிலி குடும்பத்தினர் ஒரு விபத்தில் சிக்குகின்றனர். இதைத்தொடர்ந்து ஷாமிலி உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மேலும் தன்னால் விபத்தில் சிக்கிய அவருக்கு எந்த ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என துளசி நினைக்கிறார். எனவே இன்றி எதிர்பாராத திருப்பங்களுடன் இந்த தொடர் புதிய கதைக்களத்துடன் சேர்ந்து பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாமிலியின் ரீ-என்ட்ரி தோற்றத்தை பார்த்து எப்படி இருந்த இவர் இப்படி குண்டாக மாறி விட்டாரே என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சன் தொலைக்காட்சி
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved