MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ராஜீயின் பாசத்தால் அண்ணன் தம்பிக்குள் வெடிக்கும் பூகம்பம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நாளை நடப்பது என்ன?

ராஜீயின் பாசத்தால் அண்ணன் தம்பிக்குள் வெடிக்கும் பூகம்பம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நாளை நடப்பது என்ன?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2 Min read
Rsiva kumar
Published : Aug 03 2025, 07:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
அப்பா மகள் பாசம் ; அண்ணன் தம்பிக்கிடையில் வெடிக்கும் பூகம்பம்
Image Credit : Instagram/pandianstoresfan

அப்பா மகள் பாசம் ; அண்ணன் தம்பிக்கிடையில் வெடிக்கும் பூகம்பம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு சிறுசுகள் முதல் பெரியவர்கள் வரையில் எத்தனையோ பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். அதிலேயும் கதிர் மற்றும் ராஜீக்கு என்று தனி கூட்டமே உண்டு. எப்பவுமே அப்பா பேச்சை கேட்காத கதிரை ரசிகர்கள் விமர்சிப்பது வழக்கம். ஆனால், தன்னை திருமணம் செய்து கொண்டு தன்னையும் தனது குடும்ப மானத்தையும் காப்பாற்றிய கதிர் பற்றி வெளிப்படையாக ராஜீ கூறியதைத் தொடர்ந்து கதிர் மீது பாசம் சாஸ்தியாகிவிட்டது. எப்போது கதிரை திட்டிக் கொண்டு இருக்கும் பாண்டியன் ராஜீ கூறியதைக் கேட்டு மெய் மறந்து நின்றுவிட்டார்.

23
அப்பாவிடம் மன்னிப்பு கேட்ட ராஜீ
Image Credit : Instagram/pandianstoresfan

அப்பாவிடம் மன்னிப்பு கேட்ட ராஜீ

இதுவரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது 549 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் எபிசோடு வரையில் ராஜீயின் நகை மேட்டர் தான் இரு வீட்டிலும் பூகம்பமாக வெடித்தது. அப்போது ராஜீ தனது திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசவே அவரது அப்பா சக்திவேல் அமைதியானார். அதுவரையில் பாண்டியனை பழிதீர்க்க துடித்துக் கொண்டிருந்த சக்திவேலுவிற்கு அதன் பிறகு அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது.

33
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ
Image Credit : Twitter

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ

இந்த நிலையில் தான் இனி இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோடுகளில் ராஜீ தனது அப்பாவை தனியாக சந்தித்து பேசும் சூழல் ஏற்படுகிறது. அப்பா நீங்கள் இனிமேல் என்னுடைய கல்யாணத்தை வைத்து அத்தையின் குடும்பத்தை பழி தீர்க்குறேன் என்று எதுவும் செய்ய கூடாது. அண்ணன் எப்படியும் ஜெயிலிலிருந்து வெளியில் வந்துவிடுவான் என்று பாசத்தோடு பேசிக் கொண்டிருப்பதை சக்திவேல் பார்த்துவிடுகிறார்.

அதன் பிறகு கோபத்தோடு வீட்டிற்கு வரும் சக்திவேல் தனது அண்ணனிடம் அப்பாவும், மகளும் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். இனி மருமகனை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுங்கள், என்னுடைய மகன் மட்டும் ஜெயிலில் இருக்கட்டும் என்று ஆக்ரோஷமாக பேசுகிறார். தம்பி இப்படி பேசுவதைக் கேட்டு பொருத்துக் கொள்ள முடியாத முத்துவேல் நிறுத்து வாய்க்கு வந்தபடி எதுவும் பேசாதே என்று சத்தம் போடுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை நாளைய எபிசோடில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்பட விமர்சனம்
திரைப்படம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved