MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • உண்மையை சொன்ன கார்த்திக் : கோபத்தில் கும்பாபிஷேகத்தை நிறுத்திய மாமியார்; சூடுபிடிக்கும் சீரியல்!

உண்மையை சொன்ன கார்த்திக் : கோபத்தில் கும்பாபிஷேகத்தை நிறுத்திய மாமியார்; சூடுபிடிக்கும் சீரியல்!

Most Awaited Twist in Zee Tamil Karthigai Deepam 2 Serial : கும்பாபிஷேகத்தை நடத்த வேறு வழியில்லாத சூழலில் கார்த்திக் தான் யார் என்ற உண்மையை சொன்ன நிலையில் அடுத்து என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம்.

2 Min read
Rsiva kumar
Published : Nov 30 2025, 11:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கார்த்திகை தீபம் 2
Image Credit : Zee Tamil You Tube

கார்த்திகை தீபம் 2

கார்த்திகை தீபம் 2 சீரியலில் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தவும், பிரிந்திருந்த தனது 2 குடும்பத்தை ஒன்று சேர்த்து வைக்கவும் கார்த்திக் சென்னையிலிருந்து தனது தாத்தாவின் ஊருக்கு சென்றார். அங்கு மூடியிருந்த கோயிலை திறந்த தனது மாமாவின் கையால் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் என்று வாக்குறுதி கொடுத்து அத்தை சாமுண்டீஸ்வரியின் வீட்டில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். நாளடைவில் அத்தையின் நம்பிக்கையை பெற்று அவரது மகள் ரேவதியை திருமணமும் செய்தார்.

26
கோயில் கும்பாபிஷேகம்
Image Credit : Zee Tamil You Tube

கோயில் கும்பாபிஷேகம்

ஆரம்பத்தில் ரேவதிக்கு கார்த்திக்கை பிடிக்கவில்லை என்றாலும் கூட, அதன் பிறகு கார்த்திக் யார் என்ற உண்மையை தெரிந்து கொண்டு அவரை காதலிக்க ஆரம்பித்தார். இப்போது இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கனவோடு ரேவதி இருக்கிறார். இந்த சூழலில் தான் ஏற்கனவே கும்பாபிஷேகம் நடைபெற இருந்த நிலையில் கார்த்திக்கின் அம்மா விபத்தில் உயிரிழந்தார். இதனால் கும்பாபிஷேகம் நின்றது.

36
யார் என்ற உண்மையை சொன்ன கார்த்திக்
Image Credit : Zee Tamil You Tube

யார் என்ற உண்மையை சொன்ன கார்த்திக்

அதன் பின்னர் எப்போதெல்லாம் கும்பாபிஷேகத்தை நடத்த பேச்சு அடிபடுகிறதோ அப்போதெல்லாம் காளியம்மாள், சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோர் அதனை நிறுத்த எல்லா வேலைகளையும் செய்தார்கள். ஒரு கட்டத்தில் சாமியாடி வேட்டைக்கு சென்ற ராஜராஜனை கொலை செய்யவும் துணிந்தனர். ஆனால், அதில் சிக்கியது பரமேஸ்வரி தான். இப்படிப்பட்ட நிலையில் தான் கடைசியாக கோயிலில் பாம் வைக்கவும் துணிந்தனர்.

46
கும்பாபிஷேகத்தை நிறுத்த பிளான் போட்ட காளியம்மாள்
Image Credit : Zee Tamil You Tube

கும்பாபிஷேகத்தை நிறுத்த பிளான் போட்ட காளியம்மாள்

கும்பாபிஷேகத்தை நிறுத்த 2 இடங்களில் வெடிகுண்டு வைத்தனர். இதில் ஒரு இடத்தை காளியம்மாவே கார்த்திக்கிடம் சொல்லி அதனை எடுத்துவிட்டார். ஆனால், 2ஆவது வெடிகுண்டை ராஜராஜன் அணிந்திருந்த மாலையில் வைத்திருந்தார். அதை கண்டுபிடிக்க முடியாத நிலையில் தான் யார் என்ற உண்மையை கார்த்திக் சொல்ல முன் வந்தார். ரேவதி, பரமேஸ்வரி, கவுசல்யா, மயில்வாகனம் என்று எத்தனையோ பேர் சொன்னாலும் இதுதான் அதற்கான பதிலாக இருக்கும் என்று கூறி யார் என்ற உண்மையை சொல்லிவிட்டார்.

56
கும்பாபிஷேகத்தை நிறுத்திய சாமுண்டீஸ்வரி
Image Credit : Zee Tamil You Tube

கும்பாபிஷேகத்தை நிறுத்திய சாமுண்டீஸ்வரி

இது தொடர்பான எபிசோடு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில், கார்த்திக் அத்தை என்னை மன்னித்துவிடுங்கள். ராஜா சேதுபதியின் உண்மையான பேரன் யார் என்று உங்களிடம் சொல்வதாக சொல்லியிருந்தேன். அது வேறு யாருமில்லை நான் தான் என்றார். அதனை கேட்ட சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைந்து கோயில் கும்பாபிஷேகத்தை நிறுத்தினர். ஒவ்வொரு முறையும் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது நான் அசிங்கப்படுவதோடு அவமானமும் படுகிறேன். இனிமேல் இந்த கோயில் கும்பாபிஷேகம் நடக்காது என்று கூறுகிறார். 

66
கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுமா?
Image Credit : Zee Tamil You Tube

கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுமா?

கார்த்திக் கையோடு உங்களது அம்மாவை யார் கொலை செய்தது என்ற உண்மையையும் சொல்கிறார். ஆனால், அதையெல்லாம் சந்திரகலா நம்பவே இல்லை. பரமேஸ்வரி காலில் விழாத குறையாக கோயில் கும்பாபிஷேகத்தை நடத்துவது பற்றியும், தனது பேரனை பற்றியும் கூறுகிறார். ஆனால், அதற்கெல்லாம் சாமுண்டீஸ்வரி மசிவதாக இல்லை. அதோடு அந்த எபிசோடும் முடிந்தது. இனி தான் ஆட்டம் சூடுபிடிக்கும். அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
அப்பாவி மக்களை காப்பாற்ற கார்த்திக் எடுத்த திடீர் முடிவு: அதிர்ச்சியில் மாமியார்: கார்த்திகை தீபம் 2!
Recommended image2
நின்ற இடத்திலேயே இருந்து திருடனை கண்டுபிடித்த ஐபிஎஸ் அதிகாரியின் மூளையோ மூளை!
Recommended image3
சரவணனுக்கு கள்ளத்தொடர்பு இருக்கு: அபாண்டமா குற்றம் சாட்டிய மயில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved