MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கோமாவில் இருந்து கண் விழித்த அப்பத்தா.! கோவத்தில் வார்த்தையை விட்ட குணசேகரன்... நோஸ் கட் செய்த ரேணுகா!

கோமாவில் இருந்து கண் விழித்த அப்பத்தா.! கோவத்தில் வார்த்தையை விட்ட குணசேகரன்... நோஸ் கட் செய்த ரேணுகா!

'எதிர்நீச்சல்' சீரியலில் ஜீவானந்தத்தை கொள்வதற்காக குணசேகரின் தம்பி கதிர் மற்றும் வளவன் ஆகியோர் ஒரு பக்கம் தேடிக் தேடிக்கொண்டிருக்கின்றனர். ஜனனியும் அவரை சந்திக்க முயற்சி செய்து வரும் நிலையில், இன்றைய புரோமோ வெளியாகி சீரியல் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.

2 Min read
manimegalai a
Published : Aug 17 2023, 03:32 PM IST| Updated : Aug 17 2023, 03:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில், ஆணாதிக்கத்துக்கு எதிராக ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலில் அப்பத்தாவின் 40 சதவீத சொத்துக்கள் தற்போது ஜீவானந்தத்தின் கைக்கு போய்விட்டதை அறிந்த குணசேகரன், அவர் மீது கொலை வெறியில் இருக்கிறார். பல வழிகளில் ஜீவானந்தத்திடம் இருந்து சொத்துக்களை மீட்க குணசேகரன் முயற்சி செய்த நிலையில்... அனைத்திலும் தோல்வியே மிஞ்சியது.

25

எனவே ஜீவானந்தம் தன்னுடைய மகள் மற்றும் மனைவியை, யாரின் துணையும் இல்லாமல் ரகசியமாக சந்திக்க வருவதை அறிந்து, ஒருபுறம் ஜனனியும் மற்றொருபுறம் குணசேகரின் தம்பி கதிர் ஓய்வு பெற்ற போலீசான கிள்ளி வளவனுடன் கொடைக்கானல் மலை பகுதியில் தேடி வருகின்றனர். 

சல்வார் அழகில் கச்சிதமாக அழகை வெளிப்படுத்திய அனிகா சுரேந்தரன்! சுத்தி போட சொல்லும் நெட்டிசன்கள்!

35

ஜனனி அப்பத்தாவுக்கும், ஜீவானந்தத்துக்கும் என்ன உறவு என்கிற கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள ஜீவானந்தத்தை அணுகியிருக்கும் நிலையில், கதிரும் வளவனும் ஜீவானந்தத்தை கொலை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் உள்ளனர். இதை எதையும் அறியாத ஜீவானந்தம் மனைவி மகள் இருக்கும் வீட்டை நோக்கி மலை பாதையில் தனியாக நடந்து வருகிறார்.

45

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அப்பத்தா கோமாவில் இருந்து கண்விழ்த்து உள்ள ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. எதுவும் பேசாமல் அப்பத்தா சோபாவில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு பக்கத்தில் விசாலாட்சி, ரேணுகா, நந்தினி, உள்ளிட்ட அனைவரும் நிற்கின்றனர். நந்தினி மாடியில் இருந்து "ஈஸ்வரி அக்கா... அப்பத்தா கண்ணு முழிச்சுட்டாங்க என கூறுகிறார்". விஷயம் தெரிந்து அப்பத்தா இருக்கும் இடத்திற்கு வேகமாக வரும் குணசேகரன் "மகராசி மாதிரி மதுரையில் வாழ்ந்த என்ன, பித்துக்குளி மாதிரி அலைய விட்டுட்டல்ல... பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, ஒத்த கை விளங்காமல் போயிடுச்சு எல்லாம் உன்னால தான் என கத்துகிறார்".

சன் டிவிக்கு தயாரான சூப்பர் ஹிட் சீரியல்..! சமயம் பார்த்து தட்டி தூக்கிய விஜய் டிவி! எந்த தொடர் தெரியுமா?

55

இவருக்கு நோஸ் கட் கொடுக்கும் விதமாக ரேணுகா, "இப்படித்தான் பொய் சொல்லிகிட்டு அலைகிறார் என சொல்ல"... குணசேகரன் கடும் கோபத்தில் "என்னது பொய்யா? என ரேணுகா மீது தன்னுடைய கோபத்தை காட்டுகிறார்". குணசேகரனை கரிகாலன் பிடித்து இழுத்து கட்டுப்படுத்துகிறார். எனவே இன்றைய எபிசோட்   மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், மற்றொருபுறம் ஜீவானந்தத்திற்கு என்ன ஆகும் என்பதும் இன்றைய எபிசோட் மூலம் தெரிய வரும்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved