MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கல்யாணி தொல்லை இனி இல்லை... ரோகிணியை காப்பாற்ற மீனா கொடுத்த செம ஐடியா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

கல்யாணி தொல்லை இனி இல்லை... ரோகிணியை காப்பாற்ற மீனா கொடுத்த செம ஐடியா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷின் அம்மா கல்யாணி இறந்துவிட்டதாக கூற இருப்பதாக ரோகிணி சொல்ல அதற்கு மீனாவும் சம்மதம் தெரிவிக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Dec 02 2025, 08:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : youtube/vijaytelevision

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தான் கிரிஷின் அம்மா என்கிற உண்மை தெரிந்த மீனா, அதை வெளியே சொல்ல முடியாமல் திண்டாடுகிறார். இதற்காக முத்துவுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய மீனா, தற்போது மீண்டும் சமாதானம் ஆகி வீட்டுக்கு திரும்பி உள்ள நிலையில், ரோகிணியை சந்தித்து அவர் எப்போது உண்மையை அனைவரிடமும் கூறுவார் என்பதை கேட்டறிய சென்றிருந்தார். மகேஸ்வரி வீட்டில் தான் மீனாவும் ரோகிணியும் சந்தித்துக் கொண்டனர். அப்போது அங்கு வித்யாவும் வந்திருந்தார். அவர் மீனாவை பார்த்ததும் எதுவும் தெரியாதது போல் நடித்துள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
பல்பு வாங்கிய வித்யா
Image Credit : youtube/vijaytelevision

பல்பு வாங்கிய வித்யா

மீனாவை மகேஸ்வரி வீட்டில் பார்த்த வித்யா, கிரிஷின் அம்மா கல்யாணி இப்போ துபாயில் இல்லை என்றும் கனடா சென்றுவிட்டதாகவும் புருடா விடுகிறார். இதையெல்லாம் கேட்ட மீனா தனக்கு கிரிஷ் அம்மா இப்போ எங்க இருக்காங்கனு தெரியும் என்று சொன்னதும் வித்யா ஷாக் ஆகிறார். கிரிஷ் அம்மா தற்போது சென்னையில் தான் இருக்கிறார், இவ தான் அந்த கல்யாணி என்று ரோகிணியை பார்த்து மீனா சொன்னதைக் கேட்டதும் பேரதிர்ச்சி அடைகிறார் வித்யா. அப்போ உங்களுக்கும் எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சா என வித்யா கேட்க, நீங்க கூட என்கிட்ட சொல்லாம மறைச்சிட்டீங்கள்ல என கோபம் கொள்கிறார்.

Related Articles

Related image1
சீதா கொடுக்கும் ஐடியா... ரோகிணி விஷயத்தில் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுக்கும் மீனா - சிறகடிக்க ஆசை அப்டேட்
Related image2
ரோகிணியோடு சேர்ந்து கூட்டுக் களவாணியாக மாறும் மீனா... சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம் செம ட்விஸ்ட் வெயிட்டிங்
34
கல்யாணியை கொல்ல முடிவெடுத்த ரோகிணி
Image Credit : youtube/vijaytelevision

கல்யாணியை கொல்ல முடிவெடுத்த ரோகிணி

பின்னர் ரோகிணியிடம் எப்போ தான் உண்மையை சொல்லப்போற என மீனா கேட்க, அதற்கு அவர் கிரிஷுக்கும் மனோஜுக்கும் இடையே இணக்கம் ஏற்பட்டால் தான் நான் உண்மையை சொல்ல முடியும் என கூறுகிறார். கிரிஷ் இங்கேயும், மனோஜ் அங்கேயும் இருந்தால், எப்படி அவர்களுக்குள் நெருக்கம் வரும் என கேட்கும் மீனா, நீ கற்பனையிலேயே உருவாக்கிய அம்மா இருந்தா என்ன, செத்தால் என்ன என மீனா கேட்க, உடனே தன்னுடைய கிரிமினல் புத்தியை பயன்படுத்தி, கற்பனையில் நான் உருவாக்கிய கல்யாணியை கொல்லப்போவதாக சொல்கிறார். இதைக்கேட்டு அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.

44
விஜயா வீட்டுக்கு வரும் கிரிஷ்
Image Credit : youtube/vijaytelevision

விஜயா வீட்டுக்கு வரும் கிரிஷ்

கிரிஷின் அம்மா கல்யாணி வெளிநாட்டில் இறந்துவிட்டதாக சொல்லி கிரிஷை நம்முடைய வீட்டிற்கு அழைத்து வர இருப்பதாக ரோகிணி சொல்ல, சரி ஏதாவது பண்ணித் தொல என கூறுகிறார் மீனா. இதையடுத்து என்ன ஆனது? கிரிஷின் அம்மா இறந்த விஷயத்தை சொன்னதும் வீட்டில் இருந்தவர்கள் கிரிஷை ஏற்றுக்கொள்வார்களா? விஜயாவின் எதிர்ப்பை மீறி கிரிஷை வீட்டுக்குள் சேர்த்துக்கொள்வார்களா? முத்து எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை
Latest Videos
Recommended Stories
Recommended image1
தாலியை வச்சு கணவரை பிளாக் மெயில் செய்த சாமூண்டீஸ்வரி; ஒரு வழியாக ஊர் மக்களை காப்பாற்றிய கார்த்திக்!
Recommended image2
பண்றது பிராடுத்தனம் – இதுல பாராட்டு வேறயா: எப்படியா கள்ளா கட்டுனா சரி: காந்திமதி ஸ்டோர்ஸ் வியாபார வசூல்!
Recommended image3
இப்படி ஒரு மனைவி உடன் வாழ்வதற்கு பதில் விவாகரத்து செய்திடலாம்? என்ன செய்வார் சரவணன்?
Related Stories
Recommended image1
சீதா கொடுக்கும் ஐடியா... ரோகிணி விஷயத்தில் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுக்கும் மீனா - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image2
ரோகிணியோடு சேர்ந்து கூட்டுக் களவாணியாக மாறும் மீனா... சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம் செம ட்விஸ்ட் வெயிட்டிங்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved