Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Karthigai Deepam: மகேஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி; கார்த்திக்கை மதிக்காத ரேவதி! கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: மகேஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி; கார்த்திக்கை மதிக்காத ரேவதி! கார்த்திகை தீபம் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் ஒருவழியாக ரேவதி மற்றும் கார்த்தியின் திருமணம் நடந்து முடிந்த நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்பது பற்றி பார்ப்போம்.  

manimegalai a | Published : Apr 02 2025, 03:00 PM
2 Min read
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • Google NewsFollow Us
14
Asianet Image

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக் ரேவதி கோவிலுக்கு வந்த நிலையில், கார்த்திக்கின் அம்மா அபிராமி இவர்களை பார்த்து சந்தோச படுகிறார். பரமேஸ்வரி பாட்டியும் பேரனுக்கு நினைத்தது போலவே திருமணம் நடந்து முடிந்ததால், முருகனுக்கு தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்துகிறார்.

24
ரேவதி காலில் மெட்டி போட்டும் கார்த்திக்

ரேவதி காலில் மெட்டி போட்டும் கார்த்திக்

கார்த்திக் - ரேவதையை தொடர்ந்து சாமுண்டீஸ்வரியும் கோவிலுக்கு வருவதால், அபிராமி மற்றும் பரமேஸ்வரி இருவரும் ஒளிந்து கொள்கின்றனர். இந்த நிலையில், கோவிலில் சாமி கும்பிட்டதும் சாமுண்டீஸ்வரி கார்த்தியிடம், ரேவதி காலில் மெட்டி போட்டு விட செல்கிறார். கார்த்திக்கை இஷ்டம் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட ரேவதி வேண்டா வெறுப்பாக காலை நீட்ட கார்த்தியும் மெட்டி போடுகிறார்.

Karthigai Deepam: நடந்து முடிந்த கார்த்திக் - ரேவதி கல்யாணம்! பாட்டி சொன்ன வார்த்தை? கார்த்திகை தீபம் அப்டேட்

34
மகேஷுக்கு அதிர்ச்சி கொடுக்கிறாள் சாமுண்டீஸ்வரி:

மகேஷுக்கு அதிர்ச்சி கொடுக்கிறாள் சாமுண்டீஸ்வரி:

பெண்ணு - மாப்பிள்ளையை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் சாமுண்டீஸ்வரி நேராக யாருக்கும் தெரியாமல், குடோனுக்கு வந்து, கடத்தி கட்டி போட்டு வைக்கப்பட்டிருக்கும் மகேஷை பார்க்கிறாள். அவன்  சாமுண்டீஸ்வரியை பார்த்ததும் என்னை காப்பாத்துங்க,  என்ன யாரோ கடத்தி இங்க கொண்டு வந்துவிட்டார்கள் என சத்தம் போட . சாமுண்டீஸ்வரி நீ கேடுகெட்டவன் என்பது எனக்கு தெரிந்து தான் உன்னை நான் கடத்தி இங்க அடைத்து வைத்திருக்கிறேன். என கூறி மகேஷுக்கு அதிர்ச்சி கொடுக்கிறாள்.

44
கடும் கோபத்தில் ரேவதி:

கடும் கோபத்தில் ரேவதி:

இதை தொடர்ந்து, இன்னும் கொஞ்ச நான் நீ இங்கையே இரு. அப்பறம் நானே உன்னை விட்டுவிட சொல்கிறேன் என சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்புகிறாள். இங்கே கோவிலுக்கு சென்று வந்த கையோடு, கார்த்திக் மற்றும் ரேவதி வீட்டு வாசலில் வந்து காத்திருக்க... அவர்களுக்கு ஆரத்தி எடுத்து சாமுண்டீஸ்வரி வரவேற்கிறாள். பின்னர் அரிசி படியை தள்ளிவிடும் சடங்கை சாமுண்டீஸ்வரி ரேவதியிடம் செய்ய சொல்ல, அதற்க்கு ரேவதி மறுப்பு தெரிவிக்கிறாள். இப்படியான நிலையில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Karthigai Deepam: குழந்தை பற்றிய உண்மையை உடைத்த ரேவதி; என்ட்ரி கொடுக்கும் வில்லன் - என்ன நடக்கும்?

manimegalai a
About the Author
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார். Read More...
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்
தமிழ் சீரியல்
 
Recommended Stories
Top Stories