MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • பறிபோகிறதா சௌந்தரபாண்டியின் தர்மகர்த்தா பதவி... ஷண்முகத்தால் காத்திருக்கும் செக்மேட் - அண்ணா சீரியல் அப்டேட்

பறிபோகிறதா சௌந்தரபாண்டியின் தர்மகர்த்தா பதவி... ஷண்முகத்தால் காத்திருக்கும் செக்மேட் - அண்ணா சீரியல் அப்டேட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஊர்க்காரர்களிடம் ஷண்முகம் தர்மகத்தா தேர்தலில் நிற்க போவது இல்லை என சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Dec 27 2023, 04:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anna serial

Anna serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி கொடுத்த 40 நாளில் அவ மனதை மாற்றி காட்டுறேன் என்று சொல்லியதை அடுத்து சௌந்தரபாண்டி ஊர்க்காரர்களிடம் ஷண்முகம் தர்மகர்த்தா தேர்தலில் நிற்க போவது இல்லை என சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

24
zee tamil Anna serial

zee tamil Anna serial

அதாவது, வைகுண்டம் ஷண்முகம் அப்படி ஒன்னும் சொல்லலே அவன் தேர்தலில் நிற்பான் என்று சொல்ல வைகுண்டம் அதை அவனை இங்க வந்து சொல்ல சொல்லு என்று சொல்லி அனுப்ப வீட்டிற்கு வந்த வைகுண்டம் தர்மகர்த்தா தேர்தலில் நிற்க போவது இல்லைனு சொன்னியா? ஏன் இப்படி சொன்ன என்று கோபப்பட்டு திட்ட பரணி நிற்க வேண்டாம்னு சொன்ன விஷயத்தை சொல்கிறான். அதை கேட்டதும் வைகுண்டம் பரணி சொன்னா அதில் ஒரு காரணம் இருக்கும், அவ சொல்லிட்டா நிற்க வேண்டாம் என்று சொல்கிறார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Anna serial update

Anna serial update

பிறகு பரணியிடம் இதுபற்றி மறைமுகமாக பேச போக பரணி நீங்க என்ன கேட்க வரீங்கனு எனக்கு தெரியும் மாமா, நான் எங்க அப்பா சொன்னதால் அவனை தேர்தலில் நிற்க வேண்டாம்னு சொல்லல. அவனை நம்பி 4 தங்கைகள் இருக்காங்க. ஷண்முகம் தலைவராக பொறுப்பேற்றதும் சொந்த காசை போட்டு நிறைய செலவு பண்ணிட்டு இருக்கான். அதனால் தான் இன்னொரு பதவி வேண்டாம்னு சொன்னதாக சொல்ல வைகுண்டம் பரணியின் மனதையும் சண்முகத்தின் மீது இருக்கும் அக்கறையையும் புரிந்து கொள்கிறார். 

44
Anna serial today episode

Anna serial today episode

மறுபக்கம் ஜெயிலுக்குள் இருக்கும் சூடாமணி தர்மகத்தாவாக இருக்கும் சௌந்தரபாண்டி முருகன் கோவில் நகைகளை திருடி வைத்து கொள்வது போல கனவு கண்டு அலறி எழுகிறாள். சௌந்தரபாண்டி தர்மகர்த்தாவாக இருப்பதால் தான் இப்படியெல்லாம் செய்கிறான், அந்த பதவியை அவனிடம் இருந்து பறிக்க வேண்டும் என்று சூடாமணி முடிவெடுக்க இதே நேரத்தில் ஷண்முகம் அவளை பார்க்க ஜெயிலுக்கு வருகிறாள். இதனால் சூடாமணி இது எல்லாம் முருகனோட வேலை தான் என அறிந்து கொண்டு இது பற்றி ஷண்முகத்திடம் பேச முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... சூப்பர்ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா? அவரின் Net Worth விவரம் இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved