MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • நிர்வாணமா வீடியோ அனுப்பு... 15 லட்சம் தாரேன் - மெசேஜ் மூலம் டீல் பேசியவரை தலைதெறிக்க ஓடவிட்ட சீரியல் நடிகை

நிர்வாணமா வீடியோ அனுப்பு... 15 லட்சம் தாரேன் - மெசேஜ் மூலம் டீல் பேசியவரை தலைதெறிக்க ஓடவிட்ட சீரியல் நடிகை

நிர்வாணமாக வீடியோ அனுப்பினால் ரூ.15 லட்சம் தருவதாக மெசேஜ் மூலம் ஒருவர் தெரிவித்ததாக சீரியல் நடிகை ஒருவர் பகீர் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

2 Min read
Ganesh A
Published : Mar 28 2023, 01:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஆனந்த ராகம் என்கிற சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிகை ரிஹானாவும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் ரிஹானா, சமீபத்திய பேட்டி ஒன்றில் சமூக வலைதளங்களில் தான் எதிர்கொண்ட பாலியல் சீண்டல்கள் குறித்து பேசியுள்ளார்.

24

அதன்படி இன்ஸ்டாகிராமில் ஒருவர் தனக்கு மெசேஜ் அனுப்பி, நிர்வாணமாக வீடியோ எடுத்து அனுப்புமாறு கூறினார். பின்னர் சில பாகங்களை மட்டும் வீடியோ எடுத்து அனுப்பு, சில கேவலமான செயல்களை செய்து எனக்கு வீடியோ அனுப்பு என கேட்டிருந்தார். அப்படி செய்தால் ரூ.15 லட்சம் பணம் தருவதாகவும் அந்த நபர் அந்த மெசேஜில் கூறி இருந்தாராம். அதுமட்டுமின்றி பணம் அனுப்ப அக்கவுண்ட் நம்பரை அந்த நபர் கேட்டாராம்.

இதையும் படியுங்கள்... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவதார் 2’ திரைப்படம் ஓடிடி-க்கு வந்தாச்சு - எந்தெந்த தளங்களில் ரிலீஸ் தெரியுமா?

34

இந்த நபரை சும்மா விடக்கூடாது எப்படியாவது மாட்டிவிட வேண்டும் என முடிவெடுத்த ரிஹானா. உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதைக்கேட்டதும் சுதாரித்துக் கொண்ட அந்த நபர் அதன் பின் ரிப்ளை செய்யாமல் எஸ்கேப் ஆகிவிட்டாராம். இதுரை அந்த நபர் தன்னிடம் மாட்டவில்லை என ரிஹானா அந்த பேட்டியில் கூறி இருந்தார். அதுமட்டுமின்றி சீரியல் நடிகர் அர்னவ்வின் ரசிகர்கள் குறித்தும் பேசியிருந்தார் ரிஹானா.

44

சீரியல் நடிகர் அர்னவ் மற்றும் திவ்யா ஆகியோருக்கு இடையே பிரச்சனை நடந்தபோது அதுகுறித்து ரிஹானாவும் சமூக வலைதளங்களில் அர்னவ் பற்றி பல்வேறு தகவல்களை தெரிவித்தார். இப்படி பேசியதற்கு பின்னர் அர்னவ்வின் ரசிகர்கள் தன்னிடம் கொச்சையாக பேசியதாகவும், ரசிகர் என்கிற பெயரில் அவர்கள் மிகவும் கீழ்தரமாக நடந்துகொண்டதாகவும் ரிஹானா தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... "Life முன்னாடி மாதிரி இல்ல; இப்போ நிறைய மாறிட்டேன்" - சமந்தா!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved