MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கைதுக்கு பயந்து எஸ்கேப் ஆன ஆதி குணசேகரன்... அடுத்த ஆக்‌ஷனுக்கு ரெடியான ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

கைதுக்கு பயந்து எஸ்கேப் ஆன ஆதி குணசேகரன்... அடுத்த ஆக்‌ஷனுக்கு ரெடியான ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் முடிவெடுத்த நிலையில், அவர் எஸ்கேப் ஆகி இருக்கிறார். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Dec 01 2025, 09:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, சக்தியை மீட்ட கையோடு, ஆதி குணசேகரனுக்கு எதிராக அதிரடி ஆக்‌ஷனில் இறங்கி இருக்கிறார். ஜட்ஜ் ஒருவரை சந்தித்து ஆதி குணசேகரனைப் பற்றி புட்டு புட்டு வைத்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதோடு, அய்யாதுரை பாண்டியன் என்கிற போலீஸ் தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து களத்தில் இறங்கிய நேர்மையான போலீஸ் அதிகாரியான அய்யாதுரை, ஆதி குணசேகரனை குண்டாஸில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன் பின் இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

24
தலைமறைவு ஆன ஆதி குணசேகரன்
Image Credit : youtube/suntv

தலைமறைவு ஆன ஆதி குணசேகரன்

போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்கிற பயத்தில் ஆதி குணசேகரனை வீட்டை விட்டு வெளியேறுமாறு ஞானம் கெஞ்சி கேட்க, அவரும் வேறுவழியின்றி வீட்டை விட்டு கிளம்புகிறார். அவரை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தர்ஷினி, நந்தினி ஆகியோர் தடுக்க, அவர்களை அறிவுக்கரசி மடக்கிப் பிடித்து, ரூமுக்குள் அடைத்துவிடுகிறார். பின்னர் ஆதி குணசேகரனை காரில் அழைத்துக் கொண்டு கதிர், ஞானம், கரிகாலன் ஆகியோரும் சென்றுவிடுகிறார்கள். குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைதானால், ஒரு ஆண்டுக்கு ஜாமினில் வெளியே வர முடியாது என முல்லையும் அறிவும் பேசிக்கொள்கிறார்கள்.

Related Articles

Related image1
சக்தியை காப்பாற்ற முடியாது... கைவிரித்த டாக்டர்; கண்ணீரில் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Related image2
உயிருக்கு போராடும் சக்தி... போலீசிடம் சிக்கும் ஜனனி - எதிர்பாரா ட்விஸ்டுகளுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
34
மிரட்டும் அறிவுக்கரசி
Image Credit : youtube/suntv

மிரட்டும் அறிவுக்கரசி

காரில் செல்லும் போது, அந்த ஜனனி நம்மளை இப்படி ஓட விட்டுட்டாலே அண்ணே என புலம்பும் ஞானம், நிலைமை மட்டும் சரியாகட்டும், நானே அவளை வகுந்துவிடுகிறேன் என ஆத்திரத்தில் பேசுகிறார். மறுபுறம் வீட்டில் உள்ள பெண்களை மிரட்டியபடி பேசும் அறிவுக்கரசி, ஒரு கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்கேன். இந்த நிமிஷம் முடிவு பண்ணேன்னு வை, ஐந்து பேரையும் போட்டுதள்ளிட்டு நான் பாட்டுக்கு ஜெயிலுக்கு போயி உக்காந்திருவேன் என சொல்லிக் கொண்டிருக்கும் போது, கேட் திறக்கும் சத்தம் கேட்கிறது. அப்போது ஜனனி மாஸாக எண்ட்ரி கொடுக்கிறார்.

44
அடுத்த ட்விஸ்ட் என்ன?
Image Credit : youtube/suntv

அடுத்த ட்விஸ்ட் என்ன?

ஜனனியை பார்த்ததும் கோபத்தின் உச்சிக்கே செல்லும் அறிவுக்கரசி, அரிவாளை எடுத்துக் கொண்டு அவரை வெட்ட தயாராகிறார். இதையடுத்து என்ன ஆனது? ஜனனியை அறிவுக்கரசி கொலை செய்தாரா? ஆதி குணசேகரன் போலீசிடம் சிக்கினாரா? அய்யாதுரை பாண்டியன் தலைமறைவாக இருக்கும் ஆதி குணசேகரனை ஸ்கெட்ச் போட்டு தூக்கினாரா? சக்தியின் உடல்நிலை என்ன ஆனது? ஜனனியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? ஆதி குணசேகரனை போல் அறிவுக்கரசியையும் ஓடவிடுவாரா ஜனனி? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.
Latest Videos
Recommended Stories
Recommended image1
கோபத்தின் உச்சிக்கு சென்ற சரவணன்: வீட்டை விட்டு துரத்தப்படும் தங்கமயில்: என்ன செய்ய போகிறார் பாண்டியன்?
Recommended image2
Pandian Stores 2: பாண்டியன் குடும்பத்தில் வெடித்த பூகம்பம் – உண்மையை சொல்லிட்டாரா சரவணன்? இந்த வார புரோமோ!
Recommended image3
உண்மையை சொன்ன கார்த்திக் : கோபத்தில் கும்பாபிஷேகத்தை நிறுத்திய மாமியார்; சூடுபிடிக்கும் சீரியல்!
Related Stories
Recommended image1
சக்தியை காப்பாற்ற முடியாது... கைவிரித்த டாக்டர்; கண்ணீரில் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
உயிருக்கு போராடும் சக்தி... போலீசிடம் சிக்கும் ஜனனி - எதிர்பாரா ட்விஸ்டுகளுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved