- Home
- டெக்னாலஜி
- Mobile Recharge Price Drop: மொபைல் யூசர்களுக்கு சூப்பர் நியூஸ்! ஏர்டெல், ஜியோ ரீசார்ஜ் கட்டணம் குறைகிறது
Mobile Recharge Price Drop: மொபைல் யூசர்களுக்கு சூப்பர் நியூஸ்! ஏர்டெல், ஜியோ ரீசார்ஜ் கட்டணம் குறைகிறது
TRAI New Rule : அதிக ரீசார்ஜ் கட்டணத்தால் கஷ்டப்படும் மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை மத்திய அரசு தரப்போகிறது. டெலிகாம் நிறுவனங்கள் கட்டும் வரியை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

Mobile Recharge Price Drop
அதிக ரீசார்ஜ் கட்டணத்தால் கஷ்டப்படும் மக்களுக்கு சுமையை குறைக்க மத்திய அரசு ஒரு ஸ்பெஷல் பிளான் ரெடி பண்ணியிருக்கு. இனி வரும் நாட்களில் ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா யூசர்களுக்கு மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் குறையப்போகிறது. டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு கட்டும் வரியை குறைக்க அரசு யோசித்து வருகிறது. இதோட நேரடி லாபம் மக்களுக்குத்தான் கிடைக்கப்போகிறது. டெலிகாம் அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் தகவல்படி, மொபைல் சேவையை சாமானிய மக்களுக்கும் மலிவாக கொடுக்க அரசு ரெண்டு முக்கியமான விஷயங்களை செய்யப்போகிறது.
Airtel Family Plan: ஒரே ரீசார்ஜ் போதும்! 4 சிம்களுக்கு அன்லிமிட்டெட் கால்ஸ், 5G டேட்டா செம ஆஃபர்!
டிராய் அதிரடி
முதல் விஷயம், இப்போ டெலிகாம் நிறுவனங்கள் தங்களோட மொத்த வருமானத்துல 8 சதவீதத்தை லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணமாக அரசுக்கு கட்டுகின்றன. இந்த 8 சதவீத வரியை 3 முதல் 4 சதவீதமாக குறைக்க அரசு பிளான் பண்ணியிருக்கு.
ரெண்டாவது விஷயம், நிறுவனங்கள் கட்டும் இந்த 8 சதவீத வரியில 5 சதவீதம் கிராமப்புற இன்டர்நெட் வசதிக்காக போகிறது. இந்த நிதியில இப்போ நிறைய பணம் சேர்ந்துடுச்சு. அதனால, அடுத்த சில வருஷங்களுக்கு இந்த 5 சதவீத வரியை வசூலிப்பதை நிறுத்தி வைக்க அரசு முடிவு பண்ணியிருக்கு.
ஏன் இந்த திடீர் முடிவு?
கடந்த ஜூலை மாசம் டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை 15 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தின. இதனால 28, 56, 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பாப்புலரான பிளான்கள் ரொம்ப காஸ்ட்லி ஆகிடுச்சு. இந்த விலை ஏற்றத்தால் கிராமப்புற மக்களும், ஏழை எளிய மக்களும் ரொம்பவே பாதிக்கப்பட்டாங்க. நிறைய பேர் ரீசார்ஜ் பண்றதையே நிறுத்திட்டாங்க, இல்லைனா சிம் கார்டை கழட்டி வச்சிட்டாங்க. நாடாளுமன்றம் முதல் சோஷியல் மீடியா வரைக்கும் இதுக்கு பெரிய எதிர்ப்பு கிளம்புச்சு. இதனாலதான், இப்போ டிராய் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் கூட பேசி ஒரு நல்ல முடிவை எடுக்க அரசு களத்துல இறங்கியிருக்கு.
மக்களுக்கு என்ன லாபம்?
ஒருவேளை அரசு வரியை குறைச்சா, டெலிகாம் நிறுவனங்கள் இப்போ இருக்கிற பிளான்களோட விலையை 10 முதல் 15 சதவீதம் வரை குறைக்க வாய்ப்பு இருக்கு. இப்போ 299 ரூபாய்க்கு இருக்கிற மாதாந்திர பிளான் விலை 250 முதல் 260 ரூபாயாக குறையலாம். வருடாந்திர பிளான்கள் போட்டா, மக்களுக்கு நேரடியாக 300 முதல் 400 ரூபாய் வரை மிச்சமாகும். டெலிகாம் நிறுவனங்களுக்கு வரி விலக்கு கிடைச்ச உடனே இந்த புதிய கட்டணங்கள் அமலுக்கு வரும்னு எதிர்பார்க்கப்படுது. இது மக்களுக்கு பணத்தையும் மிச்சப்படுத்த வாய்ப்பு உள்ளது.
Jio பயனர்களுக்கு செம ஜாக்பாட்! ₹4,000 மதிப்புள்ள Canva Pro இலவசம்.. எப்படி பெறுவது?
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

