- Home
- டெக்னாலஜி
- இனி இன்கமிங் கால்கள் கட் ஆகாது.. மிச்ச டேட்டாவும் வீணாகாது.. டிராய் சொல்லப்போகும் குட்நியூஸ்!
இனி இன்கமிங் கால்கள் கட் ஆகாது.. மிச்ச டேட்டாவும் வீணாகாது.. டிராய் சொல்லப்போகும் குட்நியூஸ்!
இப்போது ரீசார்ஜ் கட்டணம் மற்றும் சேவை விதிகளை நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள சுதந்திரம் உள்ளது. ஆனால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படாமல் இருப்பதை 'டிராய்' கண்காணிக்கும்.

டெலிகாம் நிறுவனங்களால் வாடிக்கையாளர்கள் கோபம்
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா மற்றும் அரசின் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. இதில் பிஎஸ்என்எல் தவிர மற்ற நிறுவனங்கள் மாதம் 30 நாட்களுக்கு பதிலாக 28 நாட்கள் மட்டுமே பெரும்பாலும் ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருவதால் வாடிக்கையாளர்கள் கோபத்தில் இருந்தனர். இந்த புகாரை இப்போது மத்திய அரசு சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளது.
நாடாளுமன்றம் வரை சென்ற குரல்
அதாவது தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, டெலிகாம் நிறுவனங்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளான்களை வழங்குவது குறித்து முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா, நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனையை எழுப்பினார். 28 நாட்கள் பிளான் போடுவதால், ஒரு வருடத்தில் 12 முறைக்கு பதிலாக 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு ஒருவிதமான கூடுதல் நிதிச் சுமை.
இன்கமிங் கால்கள் தொடர வேண்டும்
தினமும் கிடைக்கும் 2GB டேட்டாவில் 500MB மிச்சம் இருந்தாலும், அது நள்ளிரவுக்குப் பிறகு காலாவதியாகிவிடுகிறது. பணம் கொடுத்து வாங்கிய டேட்டாவை அடுத்த நாளுக்கு ஏன் பயன்படுத்தக் கூடாது? ரீசார்ஜ் முடிந்த பிறகும், குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காவது இன்கமிங் கால்கள் மற்றும் மெசேஜ்கள் தொடர்ந்து வர வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.
30 நாள் பிளானை கட்டாயம் வைக்க வேண்டும்
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்கள் பிளான்களில் குறைந்தபட்சம் ஒரு 30 நாள் பிளானையாவது கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று டிராய் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ளார். கட்டாய 30 நாள் பிளான்: ஜியோ, ஏர்டெல், Vi போன்ற ஒவ்வொரு நிறுவனமும், தங்கள் ஸ்பெஷல் டேரிஃப் அல்லது காம்போ வவுச்சர்களில் ஒரு முழு மாதத்திற்கான (30 நாட்கள்) பிளானை வழங்கியே ஆக வேண்டும்.
இன்கமிங் சேவை மற்றும் டேட்டா ரோல்ஓவர் விதி
இந்த 30 நாள் பிளான்களைப் பற்றி நிறுவனங்கள் இன்னும் அதிகமாக விளம்பரம் செய்ய வேண்டும். அப்போதுதான் 28 நாள் மற்றும் 30 நாள் பிளான்களுக்கு உள்ள வித்தியாசத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள். ரீசார்ஜ் முடிந்த பிறகு இன்கமிங் சேவை மற்றும் டேட்டா ரோல்ஓவர் விதிகளை 'டிராய்' தற்போது மறுபரிசீலனை செய்து வருகிறது.
கண்காணிக்கும் டிராய்
தற்போது, டெலிகாம் துறையில் 'ஃபார்பியரன்ஸ்' (Forbearance) கொள்கை அமலில் உள்ளது. இதன்படி, ரீசார்ஜ் கட்டணம் மற்றும் சேவை விதிகளை நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள சுதந்திரம் உள்ளது. ஆனால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படாமல் இருப்பதை 'டிராய்' கண்காணிக்கும். தற்போதைய விதிப்படி, 90 நாட்கள் வரை சிம் கார்டை செயலிழக்கச் செய்ய முடியாது. இந்த விதியை இன்னும் எளிதாக்க அரசு ஆலோசித்து வருகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

