MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • டிராய் போட்ட போடு; இனி 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் திட்டங்கள்; இறங்கி வரும் ஜியோ, ஏர்டெல்!

டிராய் போட்ட போடு; இனி 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் திட்டங்கள்; இறங்கி வரும் ஜியோ, ஏர்டெல்!

டிராய் உத்தரவால் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ரூ.10க்கு ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வர உள்ளன. இதுகுறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Rayar r
Published : Jan 18 2025, 09:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Recharge Plans

Recharge Plans

டிராய் புதிய விதிகள்

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்லும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் பல்வேறு விலைகளில் ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக போட்டி போட்டு செயல்பட்டு வருகின்றன.

மேற்கண்ட செல்போன் ரீசார்ஜ் நிறுவனங்கள் கால்ஸ் வசதி, எஸ்எம்எஸ் வசதி மற்றும் டேட்டா ஆகியவற்றை கொண்ட தொகுப்பு ரீசார்ஜ் திட்டங்களை தான் செயல்படுத்தி வருகின்றன. கால்ஸ் வசதி மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளுக்கு என்று தனியாக திட்டங்கள் ஏதும் இல்லை.

இதனால் டேட்டா பயன்பாடு தேவையில்லாத வாடிக்கையாளர்களும் கால்ஸ் வசதி, எஸ்எம்எஸ் வசதி மற்றும் டேட்டா வசதி கொண்ட தொகுப்பு திட்டங்களை தான் ரீசார்ஜ் செய்ய வேண்டியதுள்ளது. இந்த தொகுப்பு திட்டங்களுக்கு கட்டணம் அதிகமாக உள்ளது. 

24
TRAI Order

TRAI Order

ரூ.10க்கு ரீசார்ஜ் திட்டங்கள்

இதனால் கால்ஸ் வசதி மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளுக்கு என்று தனியாக திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இந்த விஷயத்தில் களமிறங்கிய இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI)குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்க்கு ஒரு தனித்துவமான ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய செல்போன் ரீசார்ஜ் நிறுவனங்களுக்கு கடந்த மாதம் அதிரடியாக உத்தரவிட்டது.

இதனால் இந்த நிறுவனங்கள் மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. புதிய விதிகளின்படி, ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ரூ.10 தொடக்க விலையில் டாப்-அப் வவுச்சர்களை கொண்டு வர வேண்டும்.

ஜியோ பயனர்கள் காட்டில் அன்லிமிடட் டேட்டா மழை: ரூ.49க்கு அட்டகாசமான டேட்டா பிளான்
 

34
Rs.10 Recharge Plans

Rs.10 Recharge Plans

சிறப்பு கட்டண வவுச்சர்கள் 

டிராய் மற்றொரு முக்கியமான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதாவது சிறப்பு கட்டண வவுச்சர்களின் வேலிடிட்டியை 90 நாட்களில் இருந்து 365 நாட்களாக அதிகரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் ரூ.10 விலையில் ஒரு ஆண்டு வேலிடிட்டி கிடைக்கும் திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன. டிராய் இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்கள் மலிவான மற்றும் நீண்ட கால ரீசார்ஜ் திட்டங்களை பயன்படுத்த உதவுகிறது.

தற்போது 2ஜி சேவைகளைப் பயன்படுத்தும் 150 மில்லியனுக்கும் அதிகமான இந்திய ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் கடந்த மாதம் டிராய் வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களால் பயனடைவார்கள். கால்ஸ் வசதி மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளுக்கு என்று தனியாக திட்டங்கள் கொண்டு வந்தால் கட்டணங்கள் பெருமளவு குறையும்.

இதேபோல் டேட்டாக்களுக்கு மட்டும் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வர வேண்டும் எனவும் வாடிக்கையாளர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

44
JIO Plans

JIO Plans

எப்போது அமலாகும்?

டிராய் புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளதால் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்ற தொலைத்தொடர்பு துறை நிறுவனங்களுக்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்த திட்டங்கள் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை. 

ஆனாலும் ஜனவரி மாத இறுதிக்குள் கால்ஸ் வசதி மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளுக்கு என்று தனியாக மலிவு விலை ரீசார்ஜ்  திட்டங்களை செல்போன் ரீசார்ஜ் நிறுவனங்கள் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் செம பிளான்; வெறும் 3 ரூபாய்க்கு 3ஜிபி டேட்டா; 365 நாள் வேலிட்டி; சூப்பர் ஆபர்!

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜியோ
ஏர்டெல்
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
மறுஊட்டத் திட்டம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved