ரூ.225-க்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா.. ஜியோ, ஏர்டெல்-க்கு டஃப் கொடுத்த பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல் (BSNL) தனது 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ரூ.225-க்கு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், தினமும் 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும்.

பிஎஸ்என்எல் ரூ.225 திட்டம்
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தனது 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு பரிசாக புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. மிகவும் குறைந்த விலையில் அதிக பலன்களை வழங்கும் இந்த திட்டம், டேட்டா, அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றில் முழு சுதந்திரத்தையும் தருகிறது.
புதிய ரூ.225 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய புதிய ரூ.225 ரீசார்ஜ் திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும். இதில் தினமும் 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் என பல சலுகைகள் அடங்கும். ஒரு மாத காலத்திற்கான 75 ஜிபி டேட்டா அளவு வழங்கப்படுவது, இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.
இவ்வளவு குறைந்த விலையில் ஆஃபரை தற்போது எந்த தனியார் நெட்வொர்க் நிறுவனமும் வழங்கவில்லை. பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளை விரிவுபடுத்தி வருவதால், வாடிக்கையாளர்களை மீண்டும் ஈர்க்கும் நோக்கில் இப்படியான விலைகுறைந்த திட்டங்கள் அறிமுகப்படுத்தி வருகிறது.
ரூ.1 தீபாவளி ரீசார்ஜ்
இதற்கு முன், பிஎஸ்என்எல் புதிய வாடிக்கையாளர்களுக்காக “ரூ.1 தீபாவளி ரீசார்ஜ்” சலுகையையும் அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, இப்போது ரூ.225 திட்டத்தை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு அதிக டேட்டா மற்றும் அழைப்பு வசதிகளை வழங்குகிறது. குறைந்த விலையிலும் சிறந்த நெட்வொர்க் அனுபவத்தையும் தரும் பிஎஸ்என்எல், தனது 25ஆவது ஆண்டை வாடிக்கையாளர் நலன் மையமாக கொண்டாட்ட விழாவாகும் மாறியுள்ளது.