- Home
- Tamil Nadu News
- Crime News: அடங்காத மணிகண்டன்! அம்மாவுக்கு பிராக்கெட் போட்ட கையோடு 14 வயது பொண்ணுக்கு ஸ்கெட்ச்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
Crime News: அடங்காத மணிகண்டன்! அம்மாவுக்கு பிராக்கெட் போட்ட கையோடு 14 வயது பொண்ணுக்கு ஸ்கெட்ச்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
Tirunelveli News: திருநெல்வேலியில் 42 வயது பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்த இளைஞர், அப்பெண்ணின் 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (24). ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருமணமான 42 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அந்த பெண்ணின் 14 வயது மகள் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு சென்று அடிக்கடி நெருக்கமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் ஒருநாள் மாணவியின் கண்முன்னே இருவரும் உல்லாசமாக இருப்பதை பார்த்துள்ளார். அதுமட்டுமல்ல மணிகண்டன் 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்து வந்துள்ளார். தாய் கண் முன்னே மாணவிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை மாணவியின் தாய் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துள்ளார்.
நாளுக்கு நாள் மணிகண்டனின் தொல்லை தாங்க முடியாத பள்ளி மாணவி வேறு வழியில்லாமல் மகளிர் காவல் நிலையத்தில் கதறிய நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தாய், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பெற்ற மகளுக்கு கள்ளக்காதலன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

