MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அவசரமாக ஒரு நபர் ஆணையம் அமைத்தது ஏன்? திமுக அரசிடம் கேள்விகளை அடுக்கிய விஜய்!

அவசரமாக ஒரு நபர் ஆணையம் அமைத்தது ஏன்? திமுக அரசிடம் கேள்விகளை அடுக்கிய விஜய்!

Vijay Grills Stalin on Karur Stampede One-Man Commission: கரூர் விவகாரத்தில் அவசரமாக ஒரு நபர் ஆணையம் அமைத்தது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை திமுக அரசுக்கு எதிராக தவெக தலைவர் விஜய் எழுப்பியுள்ளார்.

1 Min read
Author : Rayar A
Published : Nov 05 2025, 02:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
முதல்வர் ஸ்டாலினை விளாசிய விஜய்
Image Credit : Asianet News

முதல்வர் ஸ்டாலினை விளாசிய விஜய்

கரூர் சம்பவத்துக்கு பிறகு தவெக பொதுக்குழு கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தின் முடிவில் பேசிய தவெக தலைவர் விஜய், கரூர் விவகாரத்தில் திமுக அரசு மீது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இது தொடர்பாக பேசிய விஜய், ''கரூர் விவகாரத்தில் பொய் மூட்டைகளால் நம்மை பற்றி அவதூறு பரப்புகிறார் முதல்வர் ஸ்டாலின். சட்டப்பேரவையில் முதல்வர் பேசியது வடிகட்ட பொய்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
தவெகக்கு எதிராக ஸ்டாலின் வன்மம்
Image Credit : our own

தவெகக்கு எதிராக ஸ்டாலின் வன்மம்

நமக்கு எதிராக முதல்வர் எவ்வளவு வன்மத்தை கக்கியுள்ளார். ஆனால் இதெல்லாம் ஏன் நடந்தது? எதற்கு நடந்தது? என மக்கள் கேள்வி கேட்டதை முதல்வர் மறந்து விட்டாரா? இந்தியாவில் எந்த தலைவருக்கும் இல்லாத நிபந்தனை எனக்கு விதிக்கப்பட்டது. மக்களை பார்க்கக் கூடாது. எழுந்து நிற்க கூடாது. வேனை விட்டு வெளியில் வரக்கூடாது என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

33
அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய விஜய்
Image Credit : Asianet News

அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய விஜய்

ஆனால் கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விக்கு திமுக வழக்கறிஞர்கள் வாய்மூடி நின்றனர். உச்சநீதிமன்றம் திமுக அரசின் தலையில் கொட்டியது. கரூர் சம்பவம் நடந்த உடன் அவசரம் அவசரமாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்? அதிகாரிகள் அவசரம் அவசரமாக செய்தியாளர்களை சந்தித்தது ஏன்? இந்த கேள்வியை நான் கேட்கவில்லை. திமுக அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டது. நம் மீதான அவதூறுகளை சட்டம், சத்தியத்தின் துணை கொண்டு துடைத்தெறிய போகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிவி.கே. விஜய்
tvk நெரிசல்
மு. க. ஸ்டாலின்
திமுக
தமிழ்நாடு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மாநில அரசின் கொள்கைகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம்: சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
Recommended image2
Now Playing
விஜய் ஆட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை ! எடப்பாடி பேட்டி
Recommended image3
Now Playing
புதிய தமிழக தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி அதிரடி கேள்வி
Related Stories
Recommended image1
முழு அதிகாரமும் விஜய்க்கே..! தவெக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள்..!
Recommended image2
எடப்பாடி பழனிசாமி கனவில் மண்ணை வாரிப்போட்ட விஜய்! அதிர்ச்சியில் பாஜக!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved