MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Power Cut in Tamil Nadu: தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? லிஸ்ட் வெளியானது!

Power Cut in Tamil Nadu: தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? லிஸ்ட் வெளியானது!

Power Cut in Tamil Nadu: கடந்த சில நாட்களாவே தமிழகத்தில் மின்தடை என்பது இல்லை. இந்நிலையில் நாளை மின்தடை எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்பதை பார்ப்போம். 

2 Min read
vinoth kumar
Published : Mar 26 2025, 05:38 PM IST| Updated : Mar 27 2025, 11:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tamil Nadu Electricity Board

Tamil Nadu Electricity Board

மின்சாரம் இல்லாத காலம் போய் தற்போதைய காலகட்டத்தில் மின்சாரம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக நாள் முழுவதும் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் மேற்கொள்வது வழக்கம். 

25
TNEB

TNEB

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். இந்த சூழலில் தற்போது தமிழ்நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கியுள்ளதால் மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மின்பயன்பாடு அதிகரிக்கும். இதனால் வழக்கத்தை விட மின்சாரத்தின் தேவை அதிகரிப்பதால் பல இடங்களில் மின் தடை ஏற்படும். 

இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் உஷார் மக்களே! வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!

35
maintenance work

maintenance work

இந்த சூழலில் கடந்த சில வாரங்களாகவே மின்தடை என்பது முழுவதுமாக தவிர்க்கப்பட்டு வருகிறது. இதற்கான காரணம் என்னவென்றால் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 12ம் வகுப்பு தேர்வு முடிவடைந்த நிலையில் நாளையுடன் 11ம் வகுப்பு தேர்வு முடிவடைகிறது. இதனையடுத்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற உள்ளது. 

45
Public exam

Public exam

ஆகையால் மாணவர்களின் நலன் கருதி  அனைத்து தேர்வு மையங்களிலும் நாள்தோறும் தடையற்ற வகையில் மும்முனை மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என மின்வாரியத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க:  அரசு பேருந்தில் முன்பதிவு செய்தால் பயணிகளுக்கு 10000 ரூபாய் பரிசு! கோடை காலத்திற்காக சிறப்பு குலுக்கல்!

55
power cut

power cut

இந்நிலையில் நாளைய தினம் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்பதை பார்ப்போம். அதாவது இதுவரை மின் தடை தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, தேர்வுகள் முடியும் வரை இன்னும் சில வாரங்களுக்கு வழக்கமான மின் தடை இருக்காது என்று கூறப்படுகிறது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தேர்வு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு
மின் தடை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved