MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சிபிஐ முன்பு இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார் விஜய்..!

சிபிஐ முன்பு இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார் விஜய்..!

கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இரண்டாவது முறையாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Jan 19 2026, 08:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
கரூர் சிபிஐ விசாரணை
Image Credit : Asianet News

கரூர் சிபிஐ விசாரணை

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரசார கூட்டத்தின் போது விஜய்யை பார்ப்பதற்காக கட்டுக்கடங்காத கூட்டம் கூடிய நிலையில், அப்போது உருவான கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

23
மூத்த நிர்வாகிகளிடம் 3 நாள் விசாரணை
Image Credit : Asianet News

மூத்த நிர்வாகிகளிடம் 3 நாள் விசாரணை

கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளான நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா, ஆனந்த் உள்ளிட்டோரிடம் சுமார் 3 நாட்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் விஜய் பயன்படுத்திய பிரசார வாகனமும் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடமும் அசம்பாவிதம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டது.

Related Articles

Related image1
டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!
Related image2
10 பேர் டீம் ரெடி..! தவெக பிரசார குழுவை அறிவித்தார் விஜய்..!
33
இன்று மீண்டும் ஆஜர்
Image Credit : Asianet News

இன்று மீண்டும் ஆஜர்

இந்த நிலையில் கட்சியின் தலைவரான விஜய்யை சிபிஐ அதிகாரிகள் கடந்த 12ம் தேதி நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். சுமார் 7 மணி நேரம் நடத்தப்பட்ட விசாணையில் அவரிடம் பல முக்கிய கேள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அதில் பெறப்பட்ட பதில்கள் எழுத்துப் பூர்வமாகவும், வீடியோ வடிவிலும் பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு விஜய் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே அவரிடம் விசாரணை நிறைவு பெறாத நிலையில் இன்று மீண்டும் நேரில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் படி ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
சிபிஐ (மத்திய புலனாய்வுப் பிரிவு)
கரூர் சிபிஐ விசாரணை

Latest Videos
Recommended Stories
Recommended image1
பொங்கல் முடிந்த கையோடு பொதுமக்களுக்கு அதிர்ச்சி.. மின்தடை குறித்து மின்வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்!
Recommended image2
Tamil News Live today 19 January 2026: சிபிஐ முன்பு இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார் விஜய்..!
Recommended image3
ஸ்வெட்டர் ரெடியா மக்களே.. நடுங்க வைக்கப்போகும் பனி.. எங்கெங்கு மழை? வானிலை அப்டேட்!
Related Stories
Recommended image1
டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!
Recommended image2
10 பேர் டீம் ரெடி..! தவெக பிரசார குழுவை அறிவித்தார் விஜய்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved