MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எடப்பாடி, அண்ணாமலைக்கு விஜய் நன்றி.. துணை நின்றதால் நெகிழ்ச்சி பேச்சு!

எடப்பாடி, அண்ணாமலைக்கு விஜய் நன்றி.. துணை நின்றதால் நெகிழ்ச்சி பேச்சு!

கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார். தனக்கு துணையாக நின்ற எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

1 Min read
Rayar r
Published : Sep 30 2025, 04:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 தவெக தலைவர் விஜய்
Image Credit : our own

தவெக தலைவர் விஜய்

கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கரூர் சம்பவம் நடந்தவுடன் விஜய் உடனே சென்னை கிளம்பி சென்றது கடும் விமர்சனத்தை உண்டாக்கியது. இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் முதன்முறையாக வாய் திறந்து பேசியுள்ளார்.

24
உருக்கமான வீடியோ வெளியிட்ட விஜய்
Image Credit : Asianet News

உருக்கமான வீடியோ வெளியிட்ட விஜய்

இது தொடர்பாக உருக்கமான வீடியோ வெளியிட்ட விஜய், ''என் வாழ்வில் இதுபோன்ற ஒரு துயரத்தை பார்த்தது இல்லை. நடக்க கூடாதது நடந்து விட்டது. எனது மனம் முழுவதும் வலி மட்டும் தான். பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் சந்திப்பேன். 5 மாவட்டத்துக்கு பிரசாரத்துக்கு சென்றோம். கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். கரூர் மக்கள் உண்மையை சொல்லும்போது கடவுளே வந்து உண்மையை சொல்வது போல் உள்ளது.

Related Articles

Related image1
வேறு அசம்பாவிதம் நடக்க கூடாதுன்னு தான் உடனே ஹாஸ்பிடல் போகல..! கண்ணீர் விட்டு விஜய் பேச்சு!
Related image2
கரூர் கூட்ட நெரிசல்! வதந்தி பரப்புப‌வர்களை தட்டித் தூக்கும் காவல்துறை! தவெகவினர் 2 பேர் கைது!
34
மக்களை ஏதும் செய்யாதீர்கள் சி எம் சார்
Image Credit : Asianet News

மக்களை ஏதும் செய்யாதீர்கள் சி எம் சார்

நாங்கள் காவல்துறை அனுமதி வழங்கிய இடத்தில் தான் பிரசாரம் செய்தோம். வேறு ஏதும் செய்யவில்லை. சி எம் சார் என்னை பழிவாங்க வேண்டும் என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். என்னை பழிவாங்குங்கள். மக்களை ஏதும் செய்யாதீர்கள். வேறு அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என்று தான் நான் உடனே ஹாஸ்பிடல் போகல. நண்பர்களே.. தோழர்களே எனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும்'' என்று தெரிவித்துள்ளார்.

44
அரசியல் தலைவர்களுக்கு நன்றி சொன்ன விஜய்
Image Credit : Asianet News

அரசியல் தலைவர்களுக்கு நன்றி சொன்ன விஜய்

தொடர்ந்து தனக்கு ஆதரவாக நின்ற எடப்பாடி, அண்ணாமலைக்கு நன்றி சொன்ன விஜய், ''இந்த கடினமான காலத்தில் எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
tvk நெரிசல்
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved