MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தேமுதிக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு: விஜய் பிரபாகரன் இளைஞரணி செயலாளர்

தேமுதிக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு: விஜய் பிரபாகரன் இளைஞரணி செயலாளர்

தேமுதிகவின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் வி.விஜய பிரபாகர் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பல்வேறு தலைமை கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1 Min read
Ajmal Khan
Published : Apr 30 2025, 10:36 AM IST| Updated : Apr 30 2025, 10:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தேமுதிக செயற்குழு கூட்டம்

தேமுதிக செயற்குழு கூட்டம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாஜகவோடு கூட்டணியை முறித்திருந்த அதிமுக மீண்டும் கூட்டணியை உறுதிசெய்துள்ளது. இந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவோடு கூட்டணியில் இருந்த தேமுதிக அதே கூட்டணியில் தொடர்கிறதா.?

அல்லது புதிய கூட்டணியில் இணையவுள்ளதா,? என கேள்விகள் எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்  (30.04.2025) இன்று  தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தையில்நடைபெற்றது.

24
விஜய பிரபாகரனுக்கு பொறுப்பு

விஜய பிரபாகரனுக்கு பொறுப்பு

இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், கழக இளைஞர் அணி செயலாளராக வி.விஜய பிரபாகர் இன்று (30.04.2025) முதல் நியமிக்கப்படுகிறார்.  இவருக்கு கழக நிர்வாகிகள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள்,

Related Articles

Related image1
இபிஎஸ் பிரம்மாண்ட கூட்டணி கனவுக்கு செக்.! அதிமுகவிற்கு குட் பாய் சொல்லும் பிரேமலதா.?
Related image2
Mineral Scam : குமரியில் கனிமவள கடத்தலுக்கும் திமுக அமைச்சர்களுக்கும் தொடர்பு? விஜய் பிரபாகர் குற்றச்சாட்டு!
34
தேமுதிக வளர்ச்சி பெற பாடுபட வேண்டும்

தேமுதிக வளர்ச்சி பெற பாடுபட வேண்டும்

சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.  இதே போல தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் ஒருமனதாக தலைமை கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில்

44
தேமுதிக புதிய நிர்வாகிகள்

தேமுதிக புதிய நிர்வாகிகள்

தலைமை கழக நிர்வாகிகள்

பிரேமலதா விஜயகாந்த்- கழக பொதுச் செயலாளர்

டாக்டர் V.இளங்கோவன்- கழக அவைத்தலைவர்

எல்.கே.சுதீஷ், - கழக பொருளாளர்

தப.பார்த்தசாரதி- கழக தலைமை நிலையச் செயலாளர்

அழகாபுரம்.R.மோகன்ராஜ்- கழக கொள்கைப் பரப்பு செயலாளர்

எம்.ஆர்.பன்னீர்செல்வம் -  கழக துணைச் செயலாளர்

SSS.U.சந்திரன்- கழக துணைச் செயலாளர்

S.செந்தில்குமார்- கழக துணைச் செயலாளர்

R.சுபா ரவி - கழக துணைச் செயலாளர்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
அரசியல்
திமுக
தேர்தல்
பிரேமலதா விஜயகாந்த்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved