MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • என்னை மன்னித்து விடுங்கள்.. பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்ட விஜய்.. கரூர் செல்லாததற்கு விளக்கம்!

என்னை மன்னித்து விடுங்கள்.. பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்ட விஜய்.. கரூர் செல்லாததற்கு விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரம் அழைத்து வந்து விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். தான் ஏன் கரூர் வரவில்லை என்பதற்கான காரணத்தை அவர்களிடம் விளக்கி கூறியுள்ளார்.

1 Min read
Rayar r
Published : Oct 27 2025, 04:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கரூர் தவெக கூட்ட நெரிசல்
Image Credit : Asianet News

கரூர் தவெக கூட்ட நெரிசல்

கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் நடந்தவுடன் விஜய் உடனடியாக சென்னை திரும்பியதும், கரூர் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறாததும் கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. இதன்பின்பு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு விஜய் சென்னையின் இருந்தபடி வீடியோ காலில் ஆறுதல் கூறினார்.

24
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய்
Image Credit : Asianet News

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய்

இந்த நிலையில், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்படவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் அழைத்து வந்து அவர்களுக்கு விஜய் இன்று ஆறுதல் கூறினார். மாமலப்புரத்தில் உள்ள நட்ச்சத்திர ஹோட்டலில் ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனியாக சந்தித்து விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.

அப்போது அவர்களிடம் கண்ணீர் மல்க பேசிய விஜய், ''உங்கள் அனைவரையும் சென்னை அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். நான் நிச்சயம் கரூர் வந்து உங்களை சந்திப்பேன். வாழ்நாள் முழுவதும் குடும்பத்தில் ஒருவனாக நான் உங்களுடன் இருப்பேன். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவேன்'' என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Articles

Related image1
எங்கள் குடும்பம் நடுரோட்டில்... எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா..! தவெகவை உலுக்கும் போஸ்டர்..!
Related image2
விஜய் சொன்ன ஒற்றை வார்த்தையை கேட்டு... நடிப்புக்கே கும்பிடு போட்ட ரோஜா!
34
அனைத்து உதவியும் செய்வதாக உறுதி
Image Credit : social media

அனைத்து உதவியும் செய்வதாக உறுதி

மேலும் கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு என அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன. விஜய் விரைவில் கரூர் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரம் அழைத்து வந்து அவர் ஆறுதல் தெரிவித்தது பெரும் விமர்சனத்தை உண்டாக்கி இருக்கிறது.

44
கரூர் செல்லாதது ஏன்? விஜய் விளக்கம்
Image Credit : x

கரூர் செல்லாதது ஏன்? விஜய் விளக்கம்

கரூர் வருவதில் விஜய்க்கு என்ன பிரச்சனை? என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், தான் கரூர் செல்லாதது குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் விளக்கம் அளித்துள்ளார். அதாவது கரூரில் மண்டம் ஏதும் கிடைக்கவில்லை. போலீஸ் அனுமதி உள்ளிட்ட சிக்கல் காரணமாக தான் நேரில் வர முடியவில்லை என விஜய் அவர்களிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிவி.கே. விஜய்
tvk நெரிசல்
தமிழ்நாடு
அரசியல்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved