MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பல கால்களைப் பிடித்த பழனிசாமி.. இப்ப மோடி காலில் டோட்டல் சரண்டர்! கிழித்து தொங்க விட்ட உதயநிதி!

பல கால்களைப் பிடித்த பழனிசாமி.. இப்ப மோடி காலில் டோட்டல் சரண்டர்! கிழித்து தொங்க விட்ட உதயநிதி!

ஸ்ரீரங்கத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பல தலைவர்களின் கால்களைப் பிடித்து பதவிக்கு வந்ததாக விமர்சித்தார். மேலும், ஆளுநர் ஆர்.என். ரவியுடன் தமிழ்நாடு தொடர்ந்து போராடி வெல்லும் என்று பதிலடி கொடுத்தார்.

1 Min read
SG Balan
Published : Oct 08 2025, 08:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பழனிசாமியை இறங்கி அடித்த உதயநிதி
Image Credit : Asianet News

பழனிசாமியை இறங்கி அடித்த உதயநிதி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.

24
பல கால்களைப் பார்த்த பழனிசாமி!
Image Credit : Asianet News

பல கால்களைப் பார்த்த பழனிசாமி!

"நன்றி காட்டுவதற்காக நான்கு தலைவர்களின் காலைப் பிடித்து, மாறி மாறிப் போன ஒரே ஆள் எடப்பாடி பழனிசாமிதான்," என்று விமர்சித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை கடுமையாகச் சாடினார்.

“எடப்பாடி பழனிசாமி முதலில் ஜெயலலிதாவின் காலைப் பிடித்தார். அவர் இறந்த பிறகு, சசிகலாவின் காலைப் பிடித்தார். பின்னர், அவரை சிறைக்கு அனுப்பிவிட்டு, டி.டி.வி. தினகரனின் காலைப் பிடித்தார். அதன் பிறகு, சிறிது காலம் மோடியின் காலையும் அமித் ஷாவின் காலையும் பிடித்தார். தற்போது, முழுமையாக மோடியின் காலில் சரணடைந்துவிட்டார்.”

Related Articles

Related image1
தமிழக அரசுக்கு அஜித் செய்த உதவி! நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!
Related image2
அசம்பாவிதம் நடக்கவேண்டும் என்பதற்காகவே.. கரூர் விவகாரத்தில் பகீர் கிளப்பும் எடப்பாடி பழனிசாமி
34
ஆளுநர் ரவியுடன் போராடும் தமிழ்நாடு
Image Credit : X-@rajbhavan_tn

ஆளுநர் ரவியுடன் போராடும் தமிழ்நாடு

அண்மையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேர்தல் பிரசார பாணியில் பேசியதற்கும் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். "சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் ரவியும், தனது தேர்தல் பரப்புரையை தொடங்கி, 'தமிழ்நாடு யாருடன் போராடப் போகிறது?' எனக் கேட்டுள்ளார். நான்கரை ஆண்டுகளாக ஆளுநருடன் தமிழ்நாடு போராடிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து போராடி வென்று காட்டுவோம்," என்று ஆளுநருக்குப் பதிலடி கொடுத்தார்.

44
திண்டுக்கல்லில் உதயநிதி ஆய்வு
Image Credit : Asianet News

திண்டுக்கல்லில் உதயநிதி ஆய்வு

திருச்சி நிகழ்ச்சியைத் தொடர்ந்து திண்டுக்கல் சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அங்கு மாவட்ட அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அரசுத் திட்டங்களின் செயலாக்கம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "முதலமைச்சர் ஆணைக்கிணங்க எல்லா மாவட்டங்களுக்கும் சென்று, அங்கே இருக்கக்கூடிய மாவட்ட அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன், திட்டப்படியான பணிகள் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை ஆய்வு செய்தோம்," என்று தெரிவித்தார். அரசின் திட்டங்கள் மக்களிடம் சரியான முறையில் சென்று சேர்வதை உறுதி செய்வதே இந்த ஆய்வின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தமிழ்நாடு
திருச்சிராப்பள்ளி
மு. க. ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி
ஆளுநர் ஆர்.என். ரவி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved