தமிழக அரசுக்கு அஜித் செய்த உதவி! நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!
ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில், நடிகர் அஜித்குமார் குழு 3வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்ததோடு, SDAT லோகோவை பயன்படுத்தியதற்கு நன்றியும் கூறியுள்ளார்.

ஸ்பெயினில் அஜித் ரேஸ்
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்று வரும் க்ரெவென்டிக் 24ஹெச் ஐரோப்பியன் எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப் சீரிஸ் 2025 (Creventic 24H European Endurance Championship Series 2025) கார் பந்தயத்தில், நடிகர் அஜித்குமார் தலைமையிலான குழு பங்கேற்றுள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் நடிகர் அஜித்தின் குழு சாதனை படைத்ததையடுத்து, தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் பதிவு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில், "நடிகரும் - நண்பருமான அஜித்குமார் சாரின் 'Ajith Kumar Racing Team', க்ரெவென்டிக் 24ஹெச் ஐரோப்பியன் எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப் சீரிஸ் 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் (Overall-P3) பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம்.
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமையடையச் செய்துள்ள அஜித் சாருக்கும் - அவருடைய குழுவினருக்கும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்." எனக் கூறியுள்ளார்.
நடிகரும் - நண்பருமான அஜித்குமார் சாரின் 'Ajith Kumar Racing Team', Creventic 24H European Endurance Championship Series 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் (Overall-P3) பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம்.
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும்… pic.twitter.com/zzleaHeYbV— Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) October 5, 2025
SDAT லோகோ பயன்படுத்தியதற்கு நன்றி!
மேலும், “இந்த சர்வதேச போட்டியின் போது, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) லோகோ-வை, கார் - ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம். 'Ajith Kumar Racing Team' track-இல் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கட்டும்.”
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அஜித் ரசிகர்கள் உற்சாகம்
நடிகர் அஜித்குமார் கார் பந்தயத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதுடன், அவருடைய குழு சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற்றது ரசிகர்கள் மத்தியிலும், விளையாட்டுத் துறையிலும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.