MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்.. நாளை என்ன நடக்கும்? டெல்லி போலீசிடம் உதவி கேட்ட தவெக!

சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்.. நாளை என்ன நடக்கும்? டெல்லி போலீசிடம் உதவி கேட்ட தவெக!

கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் நாளை (ஜனவரி 12) சிபிஐ அதிகாரிகள்  விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக விஜய்க்கு கடந்த 6ம் தேதி சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.

2 Min read
Author : Rayar r
Published : Jan 11 2026, 11:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கரூர் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை
Image Credit : Asianet News

கரூர் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை

கரூரில் நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை முடிவடைந்த நிலையில், கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடமும் விசாரணை நடந்தது.

24
புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் விசாரணை
Image Credit : X

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் விசாரணை

சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி. நிர்மல்குமார் ஆகியோர் ஆஜரானார்கள். இரண்டு நாட்கள் காலை முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் 3 பேரிடமும் பல்வேறு கிடுக்குப்பிடி கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர்.

Related Articles

Related image1
விஜய்க்கு 'செக்' வைக்கும் சிபிஐ? 8 மணி நேரம்.. ஆதவ், ஆனந்திடம் கிடுக்குப்பிடி கேள்விகள்.. பதறும் தவெக!
Related image2
விஜய்க்கு நாலாபுறமும் நெருக்கடி! பிரச்சார வாகனத்தில் இஞ்ச் இஞ்சாய் ஆய்வு நடத்திய சிபிஐ.! சிக்கிய டிரைவர்.!
34
நாளை ஆஜராகிறார் விஜய்
Image Credit : Asianet News

நாளை ஆஜராகிறார் விஜய்

கூட்டத்திற்கு விஜய் எத்தனை மணி நேரம் தாமதமாக வந்தார்? தாமதத்திற்கு என்ன காரணம்?காவல்துறையிடம் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்று அனுமதி கோரப்பட்டது? ஆனால் உண்மையில் திரண்ட கூட்டம் எவ்வளவு? என பல்வேறு கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டது. 

இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் நாளை (ஜனவரி 12) அதிகாரிகள் சிபிஐ விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக விஜய்க்கு கடந்த 6ம் தேதி சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.

டெல்லி போலீசிடம் உதவி கேட்ட தவெக

விசாரணைக்காக நாளை காலை 11 மணிக்கு விஜய் சிபிஐ முன்பு ஆஜராவார் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக நாளை அதிகாலையில் டெல்லி புறப்பட்டு செல்வார் என கூறப்பட்டுள்ளது.

 டெல்லி வரும் விஜய்க்கு உரிய பாதுகாப்பு கொடுக்கும்படி டெல்லி காவல்துறைக்கு தவெக சார்பில் இ மெயில் அனுப்பப்பட்டுள்ளது. விஜய்யை பார்க்க கூட்டம் கூடி அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தகுந்த ஏற்பாடுகளை செய்யும்படி டெல்லி போலீசிடம் தவெக கேட்டுக் கொண்டுள்ளது.

44
விஜய்யிடம் 2 நாள் விசாரணையா?
Image Credit : X

விஜய்யிடம் 2 நாள் விசாரணையா?

கரூர் கூட்டத்துக்கு தாமதாமாக வந்தது? கூட்டத்தை ஒருங்கிணைத்தது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை விஜய்யிடம் கேட்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விஜய்யிடம் எத்தனை மணி நேரம் விசாரணை நடைபெறும் என்பது தெரியவில்லை. ஆனால் பல மணி நேரம் விசாரணை இருக்கலாம் எனவும் நாளை மட்டுமின்றி நாளை மறுநாளும் சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிவி.கே. விஜய்
tvk நெரிசல்
சிபிஐ (மத்திய புலனாய்வுப் பிரிவு)
அரசியல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
23 மாவட்டங்களில் இன்று அடிச்சு ஊத்தப்போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?
Recommended image2
Tamil News Live Today 11 January 2026: சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்.. நாளை என்ன நடக்கும்? டெல்லி போலீசிடம் உதவி கேட்ட தவெக!
Recommended image3
ஓய்வூதியம்.. மத்திய அரசு திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக.. பழனிசாமி விளாசல்
Related Stories
Recommended image1
விஜய்க்கு 'செக்' வைக்கும் சிபிஐ? 8 மணி நேரம்.. ஆதவ், ஆனந்திடம் கிடுக்குப்பிடி கேள்விகள்.. பதறும் தவெக!
Recommended image2
விஜய்க்கு நாலாபுறமும் நெருக்கடி! பிரச்சார வாகனத்தில் இஞ்ச் இஞ்சாய் ஆய்வு நடத்திய சிபிஐ.! சிக்கிய டிரைவர்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved