MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் நாளை 'இந்த' 3 மாவட்டத்துக்கு பள்ளிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு! மாணவர்கள் குஷி!

தமிழகத்தில் நாளை 'இந்த' 3 மாவட்டத்துக்கு பள்ளிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு! மாணவர்கள் குஷி!

Schools Holiday: கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

1 Min read
Author : Rayar r
| Updated : Dec 02 2025, 07:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Image Credit : Getty

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

டிட்வா புயல் வலுவிழந்த போதிலும் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் இன்றும் விட்டு விட்டு பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. 

இந்த நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

23
திருவள்ளூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Image Credit : X

திருவள்ளூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை (டிசம்பர் 3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் அறிவித்துள்ளார். 

மேலும் செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் குஷியடைந்துள்ளனர்.

Related Articles

Related image1
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..! மாணவர்கள் குஷி! எந்தெந்த மாவட்டங்கள்?.. முழு விவரம்!
Related image2
வலுவிழந்தாலும் ஆட்டம் காட்டும் டிட்வா.. 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
33
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?
Image Credit : x

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. 

இதேபோல் நாளை நீலகிரி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பள்ளிகள் விடுமுறை
கனமழை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி
Recommended image2
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு.. அரசு தேர்வுத் துறைக்கு ஆசிரியர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!
Recommended image3
மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அட! அடுத்த மாதம் இத்தனை நாட்கள் லீவா? மாணவர்கள் குஷி!
Related Stories
Recommended image1
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..! மாணவர்கள் குஷி! எந்தெந்த மாவட்டங்கள்?.. முழு விவரம்!
Recommended image2
வலுவிழந்தாலும் ஆட்டம் காட்டும் டிட்வா.. 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved