- Home
- Tamil Nadu News
- மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அட! அடுத்த மாதம் இத்தனை நாட்கள் லீவா? மாணவர்கள் குஷி!
மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அட! அடுத்த மாதம் இத்தனை நாட்கள் லீவா? மாணவர்கள் குஷி!
School Holidays: தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச் மாதம் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கும்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை, குடியரசு தினம் என கொத்து கொத்தாக விடுமுறை கிடைத்தது. ஆனால் இந்த பிப்ரவரி மாதம் பெரிய அளவில் விடுமுறை கண்ணில் படவில்லை.
வரப்போகும் மார்ச் மாதத்திலாவது விடுமுறை கிடைக்குமா? என எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக மார்ச் 4ம் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
எதற்காக விடுமுறை?
அதாவது கன்னியாகுமரி சாமி தோப்பில் அய்யா வைகுண்டசாமியின் 194-ஆவது அவதாரத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களும் கலந்து கொள்வார்கள்.
இதனை கருத்தில் கொண்டே தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 7ம் தேதி பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் இத்தனை நாட்கள் லீவா?
இது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் கொண்டாடும் வகையில் மார்ச் மாதத்தில் மட்டும் 3 பொது விடுமுறை நாட்கள் வர உள்ளன.
அதாவது மார்ச் 19 ம் தேதி (வியாழக்கிழமை) தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால் அன்றைய நாள் அரசு விடுமுறையாகும். மார்ச் 21ம் தேதி (சனிக்கிழமை) ரமலான் பண்டிகை கொண்டாப்படுகிறது. இது தவிர மார்ச் மார்ச் 31 (செவ்வாய்க்கிழமை) மகாவீர் ஜெயந்தி வருவதால் இவை அனைத்தையும் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
மாணவர்கள், ஆசிரியர்கள் குஷி
இது மட்டுமின்றி ரமலான் சனிக்கிழமை வருவதால் அதை தவிர்த்து, மீதமுள்ள சனி, ஞாயிற்றுக்கிழமைகளையும் சேர்த்து 8 நாட்கள், பொது விடுமுறை 3 நாட்கள் என மொத்தமாக 11 நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கும். பொதுவாக விடுமுறை இல்லாமல் வறட்சியாக இருக்கும் மார்ச் மாதத்தில் லட்டு போல் 3 பொது விடுமுறை வருவது மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

