MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அஜித்குமார் சம்பவத்தின் வடு மறைவதற்குள் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்! நடந்தது என்ன? விடாத அண்ணாமலை!

அஜித்குமார் சம்பவத்தின் வடு மறைவதற்குள் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்! நடந்தது என்ன? விடாத அண்ணாமலை!

திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பஞ்சலால் ரூ.45 கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக்கு முன்னதாக சடலமாக மீட்கப்பட்டார். இரண்டு வாரங்களாக வழக்கு பதிவு செய்யாமல் விசாரித்த துணை ஆணையர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2 Min read
vinoth kumar
Published : Jul 11 2025, 08:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நவீன் பஞ்சலால்
Image Credit : our own

நவீன் பஞ்சலால்

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வையூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் நவீன் பஞ்சலால் (37). இவருக்கு திருமணமாகி குடும்பத்துடன் சென்னை புழல் அடுத்த கதிர்வேடு, பிரிட்டானியா நகர் முதல் தெருவில் வசித்து வந்தார். இவர், சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் மேலாளராக கடந்த மூன்​றரை ஆண்​டு​களாக பணிபுரிந்து வந்தார். இந்​நிலை​யில், அண்​மை​யில் திரு​மலா பால் நிறு​வனம் அவர்​களது நிறுவன வரவு-செலவு கணக்​கு​களை சரி​பார்த்த அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ரூ.45 கோடி முறை​கேடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

25
திருமலா பால் நிறுவனத்தில் மேலாளர்
Image Credit : Google

திருமலா பால் நிறுவனத்தில் மேலாளர்

இதுதொடர்​பாக அந்​நிறு​வனம் சார்​பில் கடந்த மாதம் 25-ம் தேதி கொளத்​தூர் காவல் மாவட்ட துணை ஆணை​யர் பாண்​டிய​ராஜனிடம் புகார் தெரிவிக்​கப்​பட்​டது. புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்துவதற்காக, நவீன் பஞ்சலாலை செல்போனில் தொடர்புகொண்டு பேசியபோது, அவர், விசாரணைக்கு நாளை வருகிறேன். பணத்தையும் கொடுத்து விடுகிறேன் என் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டாம் கெஞ்சி கேட்டுக்கொண்டார்.

Related Articles

Related image1
கும்பாபிஷேகம் நடந்த மூன்று நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிர்ச்சி!
Related image2
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மொத்தம் 9 நாட்கள் விடுமுறை! இதோ லிஸ்ட்!
35
பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது
Image Credit : Google

பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது

இதுதொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்த நவீன் என்பவர், அந்த நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்னை கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரித்து வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 27 ஆம் தேதி, நவீன் மீது புகாரளித்த நிலையில், சுமார் இரண்டு வாரங்களாகியும், சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யாமல், துணை ஆணையரே நேரடியாக விசாரித்து வந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. துணை ஆணையர் பாண்டியராஜன் தற்போது விடுமுறையில் சென்றிருப்பதும் பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.

45
காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லை
Image Credit : our own

காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லை

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடு மறையும் முன்பே, மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால், உண்மையில் காவல்துறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே உண்மை. தமிழக அரசின் உள்துறையைக் கட்டுப்பாட்டில் வைக்க இயலாமல் செயலிழந்து விட்டாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்? உங்கள் பொறுப்பற்ற செயல்பாடுகளால் இன்னும் எத்தனை சட்ட மீறல்களைப் பொதுமக்கள் சகித்துக்கொள்ள வேண்டும்? உங்கள் நிர்வாகத் தோல்விகளுக்கு, வெறும் மன்னிப்பு மட்டுமே போதுமா?

55
நியாயமான விசாரணை வேண்டும்
Image Credit : Google

நியாயமான விசாரணை வேண்டும்

உடனடியாக, நவீன் அவர்கள் மரணம் குறித்த நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும், இரண்டு வாரங்களாக வழக்குப் பதிவு செய்யாமல், நவீன் மற்றும் அவரது குடும்பத்தினரை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கிய கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அண்ணாமலை பாஜக
திமுக
மு. க. ஸ்டாலின்
காவல்
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved