MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கும்பாபிஷேகம் நடந்த மூன்று நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிர்ச்சி!

கும்பாபிஷேகம் நடந்த மூன்று நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிர்ச்சி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு விழா சமீபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில், பவுர்ணமியை முன்னிட்டு கடல் நீர் உள்வாங்கியதால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.

1 Min read
vinoth kumar
Published : Jul 10 2025, 01:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
Image Credit : Asianet News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

தமிழ் கடவுளாகவும், அழகின் அம்சமாக போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா ஜுலை 7ம் தேதி வெகு விமர்சியாக நடைபெற்றது. அரோகரா விண்ணை பிளக்கும் கோஷத்துடன் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

25
குடமுழுக்கு விழா
Image Credit : Asianet News

குடமுழுக்கு விழா

குடமுழுக்கு விழா சமஸ்கிருதம் மட்டுமின்றி தமிழிலும் நடத்தப்பட்டது. தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வரவேற்பு அளித்தனர். ராஜகோபுரத்தின் மீது ஊற்றப்பட்ட புனித நீர் ட்ரோன்கள் மூலமாக கோயிலைச் சுற்றியும் இருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

Related Articles

Related image1
யாரும் தப்பிக்கவே முடியாது! அடித்து துவைப்பேன்! பிறந்த மண்ணில் இருந்து சொல்கிறேன்! சீமான் ஆவேசம்!
Related image2
உனக்கு அறிவிருக்கா? கேமராவை பிடுங்கி ஏறியுங்கள்! காண்டாகி மேடையில் கத்திய வைகோ! என்ன காரணம்?
35
30 நாட்கள் மட்டுமே மண்டல பூஜை
Image Credit : Asianet News

30 நாட்கள் மட்டுமே மண்டல பூஜை

அனைத்து கோவில்களிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர் 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். ஆனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 31-வது நாள் ஆவணி திருவிழா ஆரம்பமாக உள்ளதால், 30 நாட்கள் மட்டுமே மண்டல பூஜை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

45
திருச்செந்தூரில் கோவில் கடற்கரை உள்வாங்கியது
Image Credit : Asianet News

திருச்செந்தூரில் கோவில் கடற்கரை உள்வாங்கியது

இந்நிலையில் இன்று பவுர்ணமி தொடங்க உள்ள நிலையில் இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் கோவில் கடற்கரை பகுதியில் உள்ள செல்வதீர்த்தம் பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு சுமார் 100 அடி தூரம் கடல் நீர் திடீரென உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பச்சை நிற பாறைகள் அதிக அளவில் வெளியே தென்ப்பட்டன. மேலும் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பாறைகள் மீது ஆபத்தை உணராமல் நின்று செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்து கொண்டனர்.

55
திருச்செந்தூர்
Image Credit : our own

திருச்செந்தூர்

ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முந்திய, பிந்திய நாட்களில் கடல்நீர் உள்வாங்குவதும், பின்னர் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved