MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் தூத்துக்குடி; குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்; மக்கள் பரிதவிப்பு!

மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் தூத்துக்குடி; குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்; மக்கள் பரிதவிப்பு!

கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கனமழை காரணமாக தூத்துக்குடி வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

2 Min read
Rayar r
Published : Dec 15 2024, 09:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tamilnadu Rains

Tamilnadu Rains

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. 

நெல்லையில் தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பருக்கு ஏற்பட்டு நெல்லை நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. நெல்லை பழைய பேருந்து நிலைய பகுதிகள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பேட்டை, டவுண், பாளையம்கோட்டை, புதிய பேருந்து நிலைய பகுதிகளிலும், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், சேரன்மாகாதேவி பகுதிகளிலும் மழைநீர் பெருகியது.
 

24
Flood in Thoothukudi

Flood in Thoothukudi

தென்காசி மாவட்டம் முழுவதும் இடைவிடாமல் கொட்டிய கனமழை காரணமாக தென்காசி நகர பகுதிகளிலும்,செங்கோட்டை நகர பகுதிகளிலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டிலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் பலத்த மழை கொட்டி வருகிறது. 

தூத்துக்குடி நகர பகுதிகள் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 6,000க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் 22,000 ஏக்கர் உப்பளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் உப்பு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மீளவிட்டான், பண்டாரம்பட்டி முத்தையாபுரம் பகுதிகளில் மட்டும் 3,000 மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர் கனமழை, கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 

தமிழகத்தை நோக்கி வருகிறதா பேராபத்து? வரும் நாட்களில் மழை எப்படி இருக்கும்? பகீர் கிளப்பும் டெல்டா வெதர்மேன்!

34
Heavy Rain in Tamilnadu

Heavy Rain in Tamilnadu

தாமிரபரணியில் வெள்ளநீர் அபாய கட்டத்தை தாண்டி செல்வதால் கரையோர பகுதிகளை வெள்ளநீர் மூழ்கடித்துள்ளது. நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலையின் பல இடங்களில் தாமிரபரணி வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை, ஏரல்-திருச்செந்தூர் சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

44
Heavy Rain

Heavy Rain

இதனால் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார். தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் நேற்று தூத்துக்குடி ரயில் நிலையில் இருந்து புறப்பட வேண்டிய தூத்துக்குடி மைசூரு எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி பாலக்காடு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

Heavy Rain: தமிழகத்தை நோக்கி வரும் ஆபத்து! இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்காம்! வானிலை மையம் அலர்ட்!

 

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved