MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கொத்தாக வரும் விடுமுறை.! எதிர்பார்த்து காத்திருந்த செய்தி - தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு

கொத்தாக வரும் விடுமுறை.! எதிர்பார்த்து காத்திருந்த செய்தி - தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு

Thoothukudi Bangalore special train : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. பெங்களூரு, கொல்லம், மங்களூர், தூத்துக்குடி போன்ற நகரங்களுக்கு இடையே இந்த ரயில்கள் இயக்கப்படும்.

2 Min read
Ajmal Khan
Published : Oct 13 2025, 07:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : our own

தீபாவளி திருநாளையொட்டி வருகிற 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. இதன் காரணமாக திபாவளி பண்டிகையைய சொந்த ஊரில் கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். இதனையடுத்து ரயில், பேருந்துகளில் மூலம் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் அனைத்து ரயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டது. இதனையடுத்து தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

24
Image Credit : our own

பெங்களூரு – கொல்லம் – பெங்களூர் கேன்டோன்மெண்ட் சிறப்பு ரயில் (06561/06562) இயக்கப்படவுள்ளது. ரயில் எண் 06561: எஸ்.எம்.வி.டி பெங்களூருவிலிருந்து 16 அக்டோபர் 2025 (வியாழன்) பிற்பகல் 3.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு கொல்லம் வந்தடையும். ரயில் எண் 06562: கொல்லமிலிருந்து 17 அக்டோபர் 2025 (வெள்ளி) காலை 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.30 மணிக்கு பெங்களூர் கேன்டோன்மெண்ட் வந்தடையும். 

இந்த சிறப்பு ரயிலில் 2 ஏசி டூ டயர், 3 ஏசி த்ரீ டயர், 11 ஸ்லீப்பர், 4 சாதாரண இரண்டாம் வகுப்பு, 2 மாற்றுத்திறனாளி நட்பு இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு – கொல்லம் – பெங்களூர் கேன்டோன்மெண்ட் சிறப்பு ரயில் (06567/06568) இயக்கப்படுகிறது. ரயில் எண் 06567: எஸ்.எம்.வி.டி பெங்களூருவிலிருந்து 21 அக்டோபர் 2025 (செவ்வாய்) இரவு 11.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.55 மணிக்கு கொல்லம். ரயில் எண் 06568: கொல்லமிலிருந்து 22 அக்டோபர் 2025 (புதன்) மாலை 5.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு பெங்களூர் கேன்டோன்மெண்ட்.

Related Articles

Related image1
வாரத்தின் முதல் நாளே இப்படியா! தமிழகம் முழுவதும் இன்று 7 மணி நேரம் மின்தடை!
Related image2
அடி தூள்... இனி UPI மூலம் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்! வரிசையில் நிற்க தேவையில்லை!
34
Image Credit : our own

ஹுப்ளி – மங்களூர் – யெஸ்வந்த்பூர் சிறப்பு ரயில் (07353/07354) இயக்கப்படுகிறது. ரயில் எண் 07353: ஹுப்ளியிலிருந்து 17 அக்டோபர் (வெள்ளி) மாலை 4.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு மங்களூர் சென்றடைகிறது. ரயில் எண் 07354: மங்களூரிலிருந்து 18 அக்டோபர் (சனி) பிற்பகல் 2.35 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 11.15 மணிக்கு யெஸ்வந்த்பூர் வந்தடைகிறது. இந்த சிறப்பு ரயிலில் 1 ஏசி முதல் வகுப்பு, 1 ஏசி டூ டயர், 2 ஏசி த்ரீ டயர், 10 ஸ்லீப்பர், 4 சாதாரண, 2 மாற்றுத்திறனாளி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

யெஸ்வந்த்பூர் – மங்களூர் – பெங்களூர் கேன்டோன்மெண்ட் சிறப்பு ரயில் (06229/06230) ரயில் எண் 06229: யெஸ்வந்த்பூரிலிருந்து 19 அக்டோபர் (ஞாயிறு) அதிகாலை 12.15 மணிக்கு புறப்பட்டு அதே நாள் காலை 11.15 மணிக்கு மங்களூர் வந்தடைகிறது. ரயில் எண் 06230: மங்களூரிலிருந்து அதே நாள் (ஞாயிறு) பிற்பகல் 2.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 12.30 மணிக்கு பெங்களூர் கேன்டோன்மெண்ட் சென்றடைகிறது.

44
Image Credit : Google

பெங்களூர் – தூத்துக்குடி – பெங்களூர் கேன்டோன்மெண்ட் சிறப்பு ரயில் (06297/06298) இயக்கப்படுகிறது. ரயில் எண் 06297: கே.எஸ்.ஆர் பெங்களூருவிலிருந்து 17 மற்றும் 21 அக்டோபர் (வெள்ளி, செவ்வாய்) இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி செல்கிறது. ரயில் எண் 06298: தூத்துக்குடியிலிருந்து 18 மற்றும் 22 அக்டோபர் (சனி, புதன்) மதியம் 2.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு பெங்களூர் கேன்டோன்மெண்ட் வரை இயக்கப்படுகிறது. 

2 ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸ்-கூட்டிய ஏசி த்ரீ டயர், 2 ஏசி டூ டயர்-த்ரீ டயர், 3 ஏசி டூ டயர், 6 ஏசி த்ரீ டயர் மற்றும் 2 மாற்றுத்திறனாளி நட்பு இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட அனைத்து தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 13 அக்டோபர் 2025 காலை 8.00 மணிக்கு தெற்கு ரயில்வே இணையதளம் மற்றும் முன்பதிவு நிலையங்களில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
திருவிழாக்கள்
ரயில்
விடுமுறைக்கால சிறப்பு பேருந்து

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved