MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய மதுரை ஆட்சியர்.. என்ன நடந்தது?

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய மதுரை ஆட்சியர்.. என்ன நடந்தது?

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை ஆட்சியரையும், நீதிமன்றம் சொல்லியும் 144 தடை உத்தரவை ரத்து செய்யாத மதுரை துணை ஆணையரையும் மன்னிக்கவே முடியாது என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியிருந்தார்.

2 Min read
Author : Rayar A
Published : Feb 02 2026, 05:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திருப்பரங்குன்றம் விவகாரம்
Image Credit : Asianet News

திருப்பரங்குன்றம் விவகாரம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இரண்டு முறை உத்தரவிட்டிருந்தார். ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது. தனி நீதிபதியின் உத்தரவு சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கும் என அரசு தெரிவித்து இருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
நீதிமன்ற அவமதிப்பு
Image Credit : Asianet News

நீதிமன்ற அவமதிப்பு

மதுரை ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை காவல் ஆணையர் லோக நாதன், மதுரை காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக கூறி இவர்கள் அனைவரையும் நேரில் ஆஜராக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி கடந்த மாதம் 9ம் தேதி இவர்கள் 3 பேரும் ஆஜரானார்கள்.

மன்னிக்கவே முடியாது

அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றாததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை ஆட்சியரையும், நீதிமன்றம் சொல்லியும் 144 தடை உத்தரவை ரத்து செய்யாத மதுரை துணை ஆணையரையும் மன்னிக்கவே முடியாது என்று கூறி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாது குறித்து ஏன் என்பது குறித்து எழுத்துப்பூர்வமான பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

Related Articles

Related image1
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்துக்கு தடை.. நீதிமன்றம் அதிரடி.. தமிழக அரசிடம் காட்டமான கேள்வி!
Related image2
உங்க 2 பேருக்கும் மன்னிப்பே கிடையாது.. சேகர்பாபு சொல்லி அப்படி செஞ்சீங்களா.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆவேசம்!
34
எந்த உள்நோக்கமும் இல்லை
Image Credit : Asianet News

எந்த உள்நோக்கமும் இல்லை

இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக மதுரை ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை காவல் ஆணையர் லோக நாதன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரான நிலையில், இருவரும் தங்களது விளக்கத்தை தாக்கல் செய்தனர். அப்போது மதுரை ஆட்சியர் தரப்பில் 'நீதிமன்ற உத்தரவை மதிக்கக் கூடாது என்றோ, அதை நிறைவேற்றக் கூடாது என்றோ தனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை.

44
நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்
Image Credit : Asianet News

நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்

அப்போதைய சட்டம் ஒழுங்கு மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மதக்கலவரம் ஏற்படும் சூழல் வருவதாக தனக்கு தகவல் வந்தது. ஒரே நேரத்தில் 1,500 பேர் மலை மீது ஏற முயன்றதால் கலவரம் ஏற்படும் சூழல் உருவானதால் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என நீதிமனாறம் கருதினால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்' என்று கூறப்பட்டது. மதுரை காவல் ஆணையர் தரப்பிலும் இதே காரணங்களை கூறி விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
திருப்பரங்குன்றம்
மதுரை
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Senthil Balaji: செந்தில் பாலாஜியை தலையில் இடியை இறக்கிய கோர்ட்.. சுத்துப்போட தயாராகும் போலீஸ்.. அதிர்ச்சியில் திமுக
Recommended image2
PM Kisan: பிஎம் கிசான் பணம் உயருமா? ரூ.2000 வரணும்னா இந்த 3 வேலையை உடனே முடிங்க!
Recommended image3
Magalir Urimai Thogai: ரூ.2,500 உடனே கிடைக்க இந்த அப்டேட் அவசியம்.! 2 நிமிடத்தில் ஈசியா செய்யலாம்.!
Related Stories
Recommended image1
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்துக்கு தடை.. நீதிமன்றம் அதிரடி.. தமிழக அரசிடம் காட்டமான கேள்வி!
Recommended image2
உங்க 2 பேருக்கும் மன்னிப்பே கிடையாது.. சேகர்பாபு சொல்லி அப்படி செஞ்சீங்களா.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆவேசம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved