MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்.! அள்ளிக் கொடுத்த அரசு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்.! அள்ளிக் கொடுத்த அரசு

தமிழக அரசு, டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் அறிவித்துள்ளது. சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20% போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 Min read
Author : Ajmal Khan
Published : Oct 17 2025, 07:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : our own

தீபாவளியையொட்டி நாடு முழுவதும் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. பல மாநிலங்களில் 10 நாட்கள் வரை தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 18 முதல் 21ஆம் தேதி வரை 4 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில், 

போக்குவரத்து ஊழியர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

23
Image Credit : our own

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024-25 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை (Ex-Gratia) 2025-2026 வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் (C மற்றும் D) பிரிவு ஊழியர்கள் மற்றும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்கள் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணை தொகை தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு வழங்கப்படும்.

Related Articles

Related image1
TN Diwali Bonus: கூட்டுறவு‌ சங்க ஊழியர்களுக்கு குட்நியூஸ்! தீபாவளி போனஸ்‌ அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
Related image2
என்னையா இது பெண்களுக்கு வந்த சோதனை! இந்தியப் பெண்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல்- ஏன் தெரியுமா?
33
Image Credit : our own

இதன் அடிப்படையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் பணிபுரியும் 24816 தகுதியுடைய நபர்களுக்கு ரூ.40,62 கோடி செலவில் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கை தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மிகவும் ஈடுபாட்டுடனும், ஊக்கத்துடனும் பணியாற்றுவதையும். எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை உறுதி செய்திட வழிவகை செய்யும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Related Stories
Recommended image1
TN Diwali Bonus: கூட்டுறவு‌ சங்க ஊழியர்களுக்கு குட்நியூஸ்! தீபாவளி போனஸ்‌ அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
Recommended image2
என்னையா இது பெண்களுக்கு வந்த சோதனை! இந்தியப் பெண்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல்- ஏன் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved