MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஒரே தவணையில் 3 மாத இலவச அரிசி விநியோகம்; மத்திய அரசு அறிவிப்பு

ஒரே தவணையில் 3 மாத இலவச அரிசி விநியோகம்; மத்திய அரசு அறிவிப்பு

கிடங்கு நெருக்கடி காரணமாக, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அட்டைதாரர்களுக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான இலவச அரிசி மற்றும் கோதுமையை ஒரே தவணையில் வழங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

1 Min read
SG Balan
Published : May 30 2025, 04:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இலவச அரிசி, கோதுமை
Image Credit : Google

இலவச அரிசி, கோதுமை

கடந்த வேளாண் பருவத்தில் நாடு முழுவதும் விவசாயிகளிடமிருந்து அதிக அளவில் அரிசி மற்றும் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டதால், அவற்றைச் சேமிக்கும் கிடங்குகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அட்டைதாரர்களுக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான இலவச அரிசி மற்றும் கோதுமையை ஒரே தவணையில் வழங்க மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளையும் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலுக்கு தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

24
ரேஷன் கடைகள்
Image Credit : our own

ரேஷன் கடைகள்

தமிழகத்தில் 2.21 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் தமிழக ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதில், 1.11 கோடி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு சார்பில் மாதந்தோறும் 2.05 லட்சம் டன் அரிசியும், 8,576 டன் கோதுமையும் இலவசமாக வழங்கப்படுகிறது.

Related Articles

Related image1
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க இனி புதிய நடைமுறை.! என்னென்ன தெரியுமா.?
Related image2
ஜூன் 1 முதல் ரேஷன் பொருள் நேரடி விநியோக முறை ரத்து! அதிர்ச்சியில் பொதுமக்கள்
34
3 மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள்
Image Credit : our own

3 மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள்

தற்போது, கிடங்குகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தணிக்கும் வகையில், மத்திய அரசு இந்த சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அட்டைதாரர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கான அரிசி மற்றும் கோதுமையை ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

44
ஒரே தவணை
Image Credit : our own

ஒரே தவணை

மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலை ஏற்று, தமிழக அரசு மூன்று மாதங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை ஒதுக்கீடு செய்ய சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால், பயனாளர்கள் இனி ஒரே தவணையில் தேவையான பொருட்களைப் பெற்று சேமித்து வைக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
குடும்ப அட்டை
ரேஷன் கடை
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved