MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.1.20 லட்சம்.! அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.!

விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.1.20 லட்சம்.! அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.!

தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடன் உதவி வழங்குகிறது. TABCEDCO மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் 7% வட்டியில் 3 ஆண்டு கால அவகாசத்தில் கடனை திருப்பி செலுத்தலாம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 30 2026, 11:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக அரசின் திட்டங்கள்
Image Credit : our own

தமிழக அரசின் திட்டங்கள்

தமிழக விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு அதிரடி சரவெடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.651 கோடியில் சிறப்பு ஊக்கத் தொகை, ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியம், குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம், ரூ.4,366 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஆடு, மாடு, கோழி வளர்ப்பிற்கு மானிய விலையில் கடனுதவி வழங்கப்படுகிறது.

25
கறவை மாடு வாங்க கடன் உதவி
Image Credit : iSTOCK

கறவை மாடு வாங்க கடன் உதவி

இந்நிலையில் கறவை மாடு வாங்க தமிழக அரசு சார்பாக ரூ.1,20,000 கடன் உதவி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் - (TABCEDCO)சார்பில் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Related Articles

Related image1
மாத இறுதியில் கூட கருணை காட்டாத தங்கம், வெள்ளி? இன்று சவரன் ரூ.4,800 குறைவு.. குஷியில் நகைப்பிரியர்கள்
Related image2
எங்க தலைவர் விஜயை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க EPS! அதுக்கு நீங்க தகுதியான ஆளா! ரவுண்ட் கட்டும் நாஞ்சில் சம்பத்!
35
எப்படி விண்ணப்பிப்பது?
Image Credit : Google

எப்படி விண்ணப்பிப்பது?

அந்த வகையில், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் இந்த கடன் உதவி வழங்கப்படுகிறது.

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களில் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து பால் பண்ணை தொடங்குவதற்கு உயர்ந்த பட்சமாக ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் (எருமை உட்பட) வாங்க ரூ.1,20,000, கறவை மாடு ஒன்றுக்கு ரூ.60,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

45
வட்டி குறைவு
Image Credit : Google

வட்டி குறைவு

இந்த கடனை திரும்ப செலுத்துவதற்கு 3 ஆண்டு காலம் கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1.20 லட்சம் ரூபாய் கடன் உதவிக்கு ஆண்டு வட்டியை பொறுத்த வரைக்கும் 7 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பயனாளிகளின் பங்கு 5% எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
தகுதிகள் என்ன?
Image Credit : our own

தகுதிகள் என்ன?

* பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் - ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

* வயது: 18 முதல் 60 வரை

* மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

* குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள்

சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ். வங்கி கோரும் அடமானத்திற்குரிய ஆவணங்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம். கூட்டுறவு கடன் சங்கங்கள் (ம) வங்கிகள், ஆகிய இடங்களில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விவசாயக் கடன்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
மகுடம் சூட்ட போகும் பெண்கள்.. திமுக கூட்டணிக்கு 45% வாக்குகள்.. கருத்து கணிப்பு முடிவால் சிறகடிக்கும் அமைச்சர் நேரு
Recommended image2
நாடாளுமன்றம் சென்ற பி.டி.உஷா.. கணவர் அதிர்ச்சி மரணம்..! வீட்டில் நடந்தது என்ன.?
Recommended image3
மாத இறுதியில் கூட கருணை காட்டாத தங்கம், வெள்ளி? இன்று சவரன் ரூ.4,800 குறைவு.. குஷியில் நகைப்பிரியர்கள்
Related Stories
Recommended image1
மாத இறுதியில் கூட கருணை காட்டாத தங்கம், வெள்ளி? இன்று சவரன் ரூ.4,800 குறைவு.. குஷியில் நகைப்பிரியர்கள்
Recommended image2
எங்க தலைவர் விஜயை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க EPS! அதுக்கு நீங்க தகுதியான ஆளா! ரவுண்ட் கட்டும் நாஞ்சில் சம்பத்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved