MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே! அமைச்சரின் உத்தரவால் கொண்டாட்டத்தில் மாணவர்கள்

பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே! அமைச்சரின் உத்தரவால் கொண்டாட்டத்தில் மாணவர்கள்

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை நிறைவுபெற்று வருகின்ற 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், முதல் நாளிலேயே அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பட்டியலிட்டு அதிரடி காட்டி உள்ளார்.

1 Min read
Velmurugan s
Published : May 29 2025, 03:33 PM IST| Updated : May 30 2025, 02:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Schools Reopening
Image Credit : Google

Schools Reopening

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறையானது ஏப்ரல் 25ம் தேதி தொடங்கியது. மே மாதம் தொடக்கத்தில் வெப்பம் அதிகம் இருந்ததால் கோடை விடுமுறை நீட்டிக்கப்படலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால், பருவமழையானது வழக்கத்திற்கு முன்னதாகவே தொடங்கி உள்ளதால் தமிழகம் முழுவதும் இதமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் தொடங்கப்படும் என்று முதன்மை கல்வி அதிகாரி உறுதி படுத்தி உள்ளார்.

24
Anbil Mahesh
Image Credit : our own

Anbil Mahesh

இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் வீடியோ கால் மூலமாக நடத்திய ஆலோசனையில், சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். அதன்படி பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே கிராமப்புறங்களில் இருந்து பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி இருக்கிறதா என்பதை முதன்மை கல்வி அதிகாரிகள், போக்குவரத்து அதிகாரிகளுடன் இணைந்து கண்காணிக்க வேண்டும். தேவைப்படும் பகுதிகளில் பேருந்து வசதியை ஏற்படுத்த முற்பட வேண்டும்.

Related Articles

Related image1
அடேங்கப்பா இத்தனை நாட்களா? கோடைக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகளுக்கு கொத்தாக வரும் விடுமுறை
Related image2
விடுமுறை காலம்! ஒரு பைசா செலவில்லாமல் ஜெர்மனி பறந்த 22 அரசு பள்ளி மாணவர்கள்!
34
Minister Anbil Mahesh
Image Credit : Asianet News

Minister Anbil Mahesh

பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிளேயே மாணவர்களுக்கான இலவச நோட்டு, புத்தகம், புத்தக பை உள்ளிட்டவை விநியோகிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கான உபகரணங்கள் தற்போதே தேவையான அளவிற்கு வந்துவிட்டதா என்பதை கல்வி அதிகாரிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

44
Government School Students
Image Credit : Google

Government School Students

மேலும், முதல்வரின் காலை உணவு திட்டத்தை முதல் நாளிலேயே தரமான முறையில் தொடங்க வேண்டும். மதிய உணவுக்கு பின்னர் மாணவர்களுக்கு 20 நிமிடங்கள் நாளிதழ்களை வாசிக்கும் வகையில் நேரம் ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை தோறும் மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசு விடுமுறை
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழ்நாடு அரசு
பள்ளிகள் விடுமுறை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved