MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு: கூட்டுறவுத் துறை வெளியிட்ட குட் நியூஸ்!

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு: கூட்டுறவுத் துறை வெளியிட்ட குட் நியூஸ்!

தமிழக ரேஷன் கடைகளில் கைரேகை அங்கீகார விதியில் மாற்றம் செய்யப்பட்டு, துல்லியம் 90% இல் இருந்து 70% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ரேஷன் பொருட்களை விரைவாகப் பெற்றுச் செல்ல முடிகிறது.

2 Min read
SG Balan
Published : Jun 15 2025, 01:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு
Image Credit : our own

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு

தமிழகம் முழுவதும் உள்ள 37,328 ரேஷன் கடைகளில் (26,618 முழுநேரக் கடைகள், 10,710 பகுதிநேரக் கடைகள்) பொருட்கள் விநியோகம் சீராக நடைபெறுவதைச் உறுதிசெய்யும் வகையில், கைரேகை அங்கீகார விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ரேஷன் பொருட்களை விரைவாகப் பெற்றுச் செல்ல முடிகிறது.

25
மின்னணு விற்பனை (பி.ஓ.எஸ்.) கருவி
Image Credit : our own

மின்னணு விற்பனை (பி.ஓ.எஸ்.) கருவி

ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்ய, மின்னணு விற்பனை (பி.ஓ.எஸ்.) கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கருவியில், குடும்ப அட்டை உறுப்பினர்கள் தங்கள் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும். இந்தக் கைரேகை, ஆதார் அட்டையில் உள்ள கைரேகையுடன் ஒத்துப்போனால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும்.

ஆரம்பத்தில், கைரேகை 40% துல்லியமாக ஒத்துப்போனாலே பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், பின்னர் இந்த விதி 90% துல்லியமாக ஒத்துப்போக வேண்டும் என்று திடீரென மாற்றப்பட்டது.

Related Articles

Related image1
மிஸ் பண்ணிடாதீங்க! ரேஷன் கார்டில் மாற்றம் திருத்தம் செய்ய சூப்பர் சான்ஸ்! நாள் குறித்த தமிழக அரசு!
Related image2
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க இனி புதிய நடைமுறை.! என்னென்ன தெரியுமா.?
35
90% துல்லியம் ஏற்படுத்திய சிக்கல்கள்
Image Credit : Google

90% துல்லியம் ஏற்படுத்திய சிக்கல்கள்

90% துல்லியம் என்ற விதி அமலுக்கு வந்த பிறகு, பெரும்பாலான மக்கள் தங்கள் கைரேகையை 2, 3 முறையாவது வைக்க வேண்டியிருந்தது. இதனால், ரேஷன் கடைகளில் அதிக நேரம் செலவானது. சில நேரங்களில் கைரேகை சரியாகப் பதியாவிட்டால், கருவிழி பதிவு கருவி மூலம் சரிபார்க்கப்பட்டது. இது மேலும் தாமதத்தை ஏற்படுத்தியது.

45
கூட்டுறவுத் துறையின் நடவடிக்கை
Image Credit : Google

கூட்டுறவுத் துறையின் நடவடிக்கை

பொதுமக்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவுத் துறை மத்திய உணவுத்துறையிடம் வேண்டுகோள் விடுத்தது. இதன் விளைவாக, கைரேகை பதிவின் 90% துல்லியம் 70% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

55
காலவிரயம் ஏன்?
Image Credit : our own

காலவிரயம் ஏன்?

இந்த மாற்றத்தால், தற்போது ரேஷன் கடைகளில் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விரைவாக வழங்கப்படுகின்றன. மேலும், இந்த 70% கைரேகை ஒப்புதலை இன்னும் 10% குறைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், "தற்போது, கைரேகை பதிவு ஒருமுறை வைத்தாலே போதும் என்ற நிலைக்கு வந்துள்ளதால், முன்பைவிட சற்று வேகமாக பில் போட முடிகிறது. இருப்பினும், எடை எந்திரத்துடன் பி.ஓ.எஸ். கருவி இணைப்பு மற்றும் இணையதள வேகம் குறைவு காரணமாகவும் காலவிரயம் ஆகிறது. அதற்கும் தீர்வு கண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்" என்று தெரிவித்தனர்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு
குடும்ப அட்டை
ரேஷன் கடை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved