MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மாதம் 3 லட்சம் சம்பளம்.! அடித்தது ஜாக்பாட்! விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

மாதம் 3 லட்சம் சம்பளம்.! அடித்தது ஜாக்பாட்! விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஜெர்மனியில் செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது, மாத சம்பளம் ரூ.3 லட்சத்திற்கும் மேல்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Sep 18 2024, 10:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
college student

college student

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு

தமிழகத்தில் உயர்கல்வியில் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்வி மூலம் படித்து முடித்து ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் வேலை தேடி வெளியே வருகிறார்கள். இவர்களுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு துறையில் இணைய ஆர்வமுள்ளவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதே போல மத்திய அரசு துறையில் உள்ள ரயில்வே உள்ளிட்ட பணியிடங்களில் இணையவும் சிறந்த கல்வி வல்லுநர்களை வைத்து இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்காலத்தை திட்டமிட்டு வருகின்றனர். இது மட்டுமில்லாமல் உயர்கல்வியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பாக தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
 

25

தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

மேலும் தனியார் துறையில் வேலை வாய்ப்பும் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை சார்பாக வேலைவாய்ப்பு முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஓசூரில் அமையவுள்ள பிரபல தொழிற்சாலையான டாடா நிறுவனம் சார்பாக பணியாளர் தேர்வு நடத்தப்பட்டது.

செப்டம்பர் மாதத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் நேர்காணல் நடைபெற்றது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதே போல மருத்துவ துறையில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பும் விடுக்கப்பட்டது அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் மருத்துவ பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடத்தப்பட்டது. 

35

வெளிநாட்டில் மருத்துவ பணியாளர் வேலை

மேலும் மருத்துவ துறையில் இணைந்து செயல்பட பெரும்பாலானோருக்கு விருப்பம் இருக்கும், அதே வேலையை வெளிநாட்டில் பார்க்க வேண்டும் என்றால் மறுக்கவா முடியும். அந்த வகையில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் சவுதி அரேபிய அமைச்சகத்தில் உள்ள மருத்துவ பணிக்கு முதுகலை பட்டம் பெற்ற (Consultant/Specialist) மருத்துவர்கள் 55 வயதிற்கு மிகாமல், 3 வருட பணி அனுபவத்துடன் தேவைப்படுகிறார்கள் என அறிவிப்பும் வெளியிடப்பட்டது.  வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைதளமான  www.omcmanpower.tn.gov.in ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதே போன்று தற்போது செவிலியர்களுக்கும் புதிய வாய்ப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

45

செவிலியர்களுக்கு வெளிநாட்டில் வேலை

அந்த வகையில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்வி தொடர்பான ஆலோசனைகளும் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் வேலை பார்க்க விருப்பமாக இருக்கும் செவிலியர்களுக்கு  நான் முதல்வன் பினிஷிங் பள்ளி மூலமாக ஜெர்மனியில்  நர்சிங் வேலைக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆறு மாத காலம் ஜெர்மன் மொழியும் கற்றுத் தரப்படும் எனவும் ஏ12 பி2 வரை கற்றுத் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நர்சிங் வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளது. இதற்காக எந்தவித செலவும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 2300 முதல் 3300 யூரோ மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்திய மதிப்பில் 3 லட்சம் ரூபாய்க்கு  மேல் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.தேர்வாகும் செவிலியர்களுக்கு இலவசமாக விசாவும், விமான டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 100% வேலைவாய்ப்பு உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

55

கல்வித் தகுதி

Bsc or GMN 

முன் அனுபவம் இரண்டு வருடங்கள் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது

நான் முதல்வன் பினிஷிங் பள்ளி மூலம் திறன்மிகு பயிற்சிகள் பெறும்போது உதவித்தொகை மற்றும் பயிற்சிக்கு பின்னர் வேலைவாய்ப்பு ஆகியவை ஏற்படுத்தி தரப்படும். தற்போது இதற்கான மாணவர்கள் பதிவு தொடங்கியுள்ளது.  இதுகுறித்த கூடுதல் தகவல்களை நான் முதல்வன் வலைத்தளமான https://naanmudhalvan.tn.gov.in/ அல்லது செய்தி மக்கள் தொடர்புத்துறை சமூக ஊடக பக்கங்களில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ் செய்திகள்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved