MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அணைகள், நீர் தேக்கங்களில் போர் ஒத்திகை.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

அணைகள், நீர் தேக்கங்களில் போர் ஒத்திகை.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

இந்தியா-பாகிஸ்தான் போர் அபாயத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அடுத்த வாரத்தில் அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களிலும் பயிற்சி நடத்தப்படும்.

2 Min read
Ajmal Khan
Published : May 11 2025, 09:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியா பாகிஸ்தான் போர் எச்சரிக்கை

இந்தியா பாகிஸ்தான் போர் எச்சரிக்கை

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் அபாயம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகனைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்படி, தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்கள். அணுமின் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் ஆகியவற்றில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை கடந்த 07.05.2025 முதல் நடத்தப்பட்டு வருகிறது
 

24
இந்தியாவில் போர் ஒத்திகை

இந்தியாவில் போர் ஒத்திகை

இதன் தொடர்ச்சியாக, நேற்று 10.05.2025 சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை. வ. ஊ. சிதம்பரனார் துறைமுக ஆணையம், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையம், தூத்துக்குடி மாவட்டம் ஆகிய இடங்களில் பிற்பகல் 4 மணி முதல் 5 மணி வரை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையின் போது விமான தாக்குதலை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை குறித்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஒத்திகை போது பாதுகாப்பு, வெளியேற்றம் மற்றும் முதலுதவி தொடர்பான பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
 

Related Articles

Related image1
Mock Drill -சென்னையில் போர் ஒத்திகை? இந்தியா முழுவதும் முழு பட்டியல்!!
Related image2
1971 போருக்குப் பின் பாகிஸ்தானுக்குள் இந்தியாவின் தாக்குதல்
34
அணைகள், நீர் தேக்கங்களில் போர் ஒத்திகை

அணைகள், நீர் தேக்கங்களில் போர் ஒத்திகை

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் அடுத்த வாரத்தில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்படும். இப்பயிற்சியின் தொடக்கமாக முழு ஒத்திகைக்கான தயாரிப்புகள், கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்படும். பின்னர், வாரத்தின் இரண்டாவது பாதியில் ஆணையர்,

சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இந்த ஒத்திகை பயிற்சி நேரடியாக நிகழ்த்தப்படும். இந்த ஒத்திகை பயிற்சியினை மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் ஒருங்கிணைந்து நடத்தும்.

44
அச்சமோ பதற்றமோ வேண்டாம்

அச்சமோ பதற்றமோ வேண்டாம்

இந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையினை சரிபார்த்துக் கொள்வதற்கான ஒரு ஒத்திகை மட்டுமே ஆகும். மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம் போல இயங்கும். இப்பயிற்சி குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்துக் கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு
மு. க. ஸ்டாலின்
இந்தியா-பாகிஸ்தான் போர்
ஆபரேஷன் சிந்தூர்
பயங்கரவாதத் தாக்குதல்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved