MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இந்த மாதம் சம்பளம் எப்போது வரும்? வெளியான அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இந்த மாதம் சம்பளம் எப்போது வரும்? வெளியான அறிவிப்பு

அரசு ஊழியர்களின் மார்ச் மாத சம்பளம் ஏப்ரல் 2ஆம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் சம்பளம் தாமதமாகும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 Min read
Ajmal Khan
Published : Mar 26 2025, 02:06 PM IST| Updated : Mar 26 2025, 02:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

TN govt employees salary : அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருப்பது அரசு ஊழியர்கள் தான், அந்த வகையில் அரசின் திட்டங்களை கடைநிலை வரை கொண்டு செல்வது அரசு ஊழியர்கள் தான். இந்த நிலையில் அரசு ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், சரண் விடுப்பு திட்டத்தை உடனடியாக அமல் படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

24

ஆனால் தமிழக அரசோ சரண் விடுப்பை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இதனை ஏற்காத ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அதற்கு ஏற்றார் போல பல குடும்ப செலவு உள்ளிட்ட பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

34

இந்த நிலையில் அரசு ஊழியர்கள், ஓய்வூதிதாரர்கள் உள்ளிட்ட17 லடசம் அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத ஊதியம் காலதாமதமாக வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 இலட்சம் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள். 7.05 இலட்சம் அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஆகியவை ,

44

இவ்வாண்டு ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் 02.04.2025 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு
சம்பளம்
தமிழ் செய்திகள்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved