MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விவசாயிகளுக்கு குஷி.! உடனே 80% முன்பணம்- வெளியான வேளாண்மை துறையின் அசத்தல் அறிவிப்பு

விவசாயிகளுக்கு குஷி.! உடனே 80% முன்பணம்- வெளியான வேளாண்மை துறையின் அசத்தல் அறிவிப்பு

Quality legume seeds : தமிழக அரசு தரமான பயறுவகை விதைகளுக்கான சிறப்பு கொள்முதல் விலை திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம், விவசாயிகள் தங்கள் உளுந்து, பாசிப்பயறு போன்ற விதைகளை சிறப்பு விலைக்கு விற்பனை செய்து வருமானத்தை உயர்த்தலாம். 

2 Min read
Ajmal Khan
Published : Sep 18 2025, 09:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விவசாயிகளுக்கான திட்டங்கள்
Image Credit : Google

விவசாயிகளுக்கான திட்டங்கள்

தமிழக அரசு, வேளாண்மை – உழவர் நலத்துறை மூலம், தரமான பயறுவகை விதைகளுக்கான சிறப்பு கொள்முதல் விலை திட்டத்தை அறிவித்துள்ளது. 2024–25ஆம் ஆண்டுக்கான உழவர்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக, அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. 

இந்த திட்டத்தின் மூலம், உழவர்கள் தங்கள் பயிர்களை நேரடியாக விவசாய சந்தைகள் மற்றும் பயிர் கொள்முதல் மையங்கள் மூலம் விற்பனை செய்ய முடியும். விற்பனை செய்யும் போது, உழவரின் அடையாளமாக பாசன ஆதாரம் கொண்டிருக்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட விதைகள் விஞ்ஞானிகள் பரிந்துரைத்த தரத்திற்கேற்ப பரிசோதிக்கப்படுகின்றன.

24
தரமான பயறுவகை விதை- முன் பணம்
Image Credit : ANI

தரமான பயறுவகை விதை- முன் பணம்

மேலும், கொள்முதல் செய்யப்படும் விதைகள் அடுத்தடுத்த பருவங்களில் விவசாயிகள் பயன்பாட்டிற்காக விநியோகிக்கப்படுகின்றன. சிறப்பு திட்டத்தின் கீழ், பாசன வசதி உடைய உழவர்கள் ஏக்கருக்கு 5 க்விண்டால் வரை, மழை சார்ந்த உழவர்கள் ஏக்கருக்கு 12.5 க்விண்டால் வரை விதைகளை விற்பனை செய்யலாம்.

 விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் 80% முன்பணம் வழங்கப்படும். தேர்ச்சி விதைகளுக்கு ஆய்வு பெற்ற டான்சிடா கொள்முதல் விலையின்படி மீதமுள்ள தொகை வழங்கப்படும். சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக அனைத்து மாவட்ட உழவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

Related Articles

Related image1
தொடர்ந்து 2 நாள் விடுமுறை.! மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் போக்குவரத்துறை குஷியான அறிவிப்பு
Related image2
தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை! இந்த 21 மாவட்டங்களில்! வானிலை மையம் கொடுத்த அப்டேட்!
34
முக்கிய விதிமுறைகள்
Image Credit : tndipr

முக்கிய விதிமுறைகள்

சிறப்பு சோயாபீன், உளுந்து, பாசிப்பயறு, அல்வா வகை தட்டைப் பயறு உள்ளிட்ட விதைகள் மட்டும் வாங்கப்படும்.

விதைகள் தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மட்டுமே கொள்முதல் செய்யப்படும்.

உழவர்கள் விற்பனைக்கு செல்லும் முன், தங்களின் பாசன ஆதாரம் மற்றும் உரிய ஆவணங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்.

இந்தத் திட்டம், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதோடு, அடுத்தடுத்த தலைமுறைக்கும் தரமான விதைகள் கிடைக்க உதவுகிறது. தமிழக அரசு, உழவர்களின் நலனையே முன்னிறுத்தி தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நெல் - ஆண்டுக்கு 5 ஏக்கர் விதைப்பண்ணை

பிறபயிர்கள் - ஆண்டுக்கு 12.5 ஏக்கர் விதைப்பண்ணை.

44
தரமான பயறுவகை விதை- தொடர்புக்கு
Image Credit : Google

தரமான பயறுவகை விதை- தொடர்புக்கு

மேலும் விவரங்களுக்கு:

கிராம அளவில் - உதவி அலுவலர்கள் விதை

வட்டார அளவில் - துணை வேளாண்மை அலுவலர்/வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர்

மாவட்ட அளவில் - வேளாண்மை துணை இயக்குநர்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
விவசாயம்
விவசாயக் கடன்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved