MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எடப்பாடிக்கு டெட் லைன் விதித்த செங்கோட்டையன்..! டீம் சேர்ந்து தூக்குவோம் என கடும் எச்சரிக்கை

எடப்பாடிக்கு டெட் லைன் விதித்த செங்கோட்டையன்..! டீம் சேர்ந்து தூக்குவோம் என கடும் எச்சரிக்கை

அதிமுகவில் முக்கிய தலைவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை செங்கோட்டையன் முன்வைத்துள்ளார். டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை இணைக்காவிட்டால் எடப்பாடிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்துள்ளார்.

1 Min read
Author : Ajmal Khan
Published : Sep 05 2025, 10:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அதிமுகவில் உட்கட்சி பூசல்
Image Credit : Asianet News

அதிமுகவில் உட்கட்சி பூசல்

அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து வெடித்தன் விளைவாக டிடிவி தினகரன் சசிகலா ஓபிஎஸ் ஆகியோர் மொத்தமாக வெளியேற்றப்பட்டனர் அதனைத் தொடர்ந்து தனி தலைவராக உருவெடுத்தார் எடப்பாடி கே பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்து வரும் எடப்பாடி தொடர்ந்து தான் தோன்றித்தனமாக செயல்படுவதாக அதிமுகவின் முக்கிய தலைவராக உள்ள செங்கோட்டையன் குமுரி வருவதாக தகவல்கள் கசிந்தன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
அதிருப்தியில் செங்கோட்டையன்
Image Credit : our own

அதிருப்தியில் செங்கோட்டையன்

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வரும் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் தனது வீடு அமைந்துள்ள பகுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்து முக்கிய தகவல்களை தெரிவிக்க உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று முன்னாள் எம்பி சத்தியபாமா மற்றும் தற்போது எம்எல்ஏ பண்ணாரி ஆகியோருடன் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

 பத்திரிகையாளர்கள் சந்திப்பின் ஒட்டுமொத்த நோக்கம் பிரிந்து சென்ற அல்லது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய தலைவர்களை உடனடியாக கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதுதான் செங்கோட்டையனின் ஒற்றை நோக்கமாக இருந்தது.

Related Articles

Related image1
கட்சி உடைய கூடாது என அமைதி காத்தேன்..! இனி கதகளி தான் செங்கோட்டையன்!
Related image2
எடப்பாடியின் யூகங்கள் வியூகங்கள் எடுபடவில்லை கழகம் ஒன்றுபட வேண்டும்..! செங்கோட்டையன்
34
ஓபிஎஸ்- சசிகலா- டிடிவி இணைக்க வேண்டும்
Image Credit : our own

ஓபிஎஸ்- சசிகலா- டிடிவி இணைக்க வேண்டும்

ஆரம்ப முதலிலேயே சசிகலாவின் தீவிர விசுவாசியாக இருந்து வரும் செங்கோட்டையன் சில நாட்களாகவே எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கடைசியாக அவர் சொல்ல வந்த ஒரே விஷயம் டிடிவி தினகரன் சசிகலா ஓ பன்னீர்செல்வம் ஆகிய முக்கிய தலைவர்களை உடனடியாக கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும், 

இல்லையென்றால் கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் தான் ஒன்று சேர்த்து எடப்பாடிக்கு எதிரான நடவடிக்கைகள் ஈடுபடுவேன் என்பதை யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக வெளிப்படுத்தி விட்டார். தற்போது எடப்பாடி பழனிசாமி அடுத்த 10 நாட்களுக்குள் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என கெடு விதித்துள்ளார் 

44
எடப்பாடி அணியின் பதில் என்ன.?
Image Credit : our own

எடப்பாடி அணியின் பதில் என்ன.?

செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மற்றொரு பக்கம்,கடப்பாரை வைத்து நகரத்தினாலும் நகராத எடப்பாடி பழனிச்சாமியை, செங்கோட்டையனின் ஒற்றை பிரஸ்மீட்டா அசைத்து விடப்போகிறது என சிரிக்கிறார்கள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
அதிமுக பாஜக கூட்டணி
எடப்பாடி பழனிசாமி அதிமுக
செங்கோட்டையன்
ஓ. பன்னீர்செல்வம் - அதிமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
தவெக தொண்டர்கள் ஜாக்கிரதையா நடந்துக்கனும்.. ரஜினிகாந்த் பரபரப்பு எச்சரிக்கை
Recommended image2
Now Playing
ADMK | விஜய்யை எப்படி வீழ்த்த போகிறீர்கள்? அரசியல் களம் திமுக VS தவெக! அதிமுகவை மீட்க 3 மேஜிக் ஐடியா
Recommended image3
Coimbatore Power Cut: தமிழகத்தில் நாளை எந்தெந்த இடங்களில் மின்தடை? எத்தனை மணிநேரம்?
Related Stories
Recommended image1
கட்சி உடைய கூடாது என அமைதி காத்தேன்..! இனி கதகளி தான் செங்கோட்டையன்!
Recommended image2
எடப்பாடியின் யூகங்கள் வியூகங்கள் எடுபடவில்லை கழகம் ஒன்றுபட வேண்டும்..! செங்கோட்டையன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved