MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கட்சி உடைய கூடாது என அமைதி காத்தேன்..! இனி கதகளி தான் செங்கோட்டையன்!

கட்சி உடைய கூடாது என அமைதி காத்தேன்..! இனி கதகளி தான் செங்கோட்டையன்!

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கே.ஏ. செங்கோட்டையனுக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார், 

2 Min read
vinoth kumar
Published : Sep 05 2025, 10:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : our own

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன் கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. அந்த வகையில் 2025 பிப்ரவரியில் கோவையில் நடைபெற்ற அத்திக்கடவு-அவினாசி திட்ட பாராட்டு விழாவில், எடப்பாடி பழனிசாமி புகைப்படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெறாததை காரணம் காட்டி செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் தொடர்ந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தார். சட்டமன்றத்திலும் செங்கோட்டையன் தனித்து செயல்பட்டார்.

25
Image Credit : our own

இதனையடுத்து திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அதிமுக பாஜக கூட்டணி அமைந்தது. இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையே சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி பிரசாரத்துக்கு வந்தபோதுகூட அவரை செங்கோட்டையன் வரவேற்கவில்லை. பிரசாரத்திலும் பங்கேற்கவில்லை.

Related Articles

Related image1
10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்.! இதை செய்திருந்தால் மட்டுமே தேர்விற்கு அனுமதி! தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
Related image2
அதிமுகவில் இருந்து நீக்கப்படுகிறார் செங்கோட்டையன்.! எடப்பாடி கையில் எடுக்கும் முக்கிய ஆயுதம்
35
Image Credit : our own

இதனால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை ஓரங்கட்டத் தொடங்கினார். அவரது அதரவாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணித்து வந்தார். இந்நிலையில் செப்டம்பர் 5ம் தேதி மனம் திறந்து பேச போவதாக செங்கோட்டையன் அறிவித்தார். இதனையடுத்து தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்ததார். இதனால் அதிமுகவில் இருந்து விலகி திமுகவிற்கு செல்லப்போகிறாரா தவெகவுக்கு தாவப்போகிறாரா அல்லது சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை ஒருங்கிணைக்கப்போகிறாரா என்ற பேச்சுகள் அடிப்பட்டு வந்தன.

45
Image Credit : Asianet News

இந்நிலையில் எம்.ஜ.ஆர்., ஜெயலலிதா உருவப் படங்களை வைத்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன்: 1972ல் புரட்சித் தலைவர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. எம்ஜிஆரால் அதிமுக தொடங்கப்பட்ட காலத்தில் கிளைக் கழக செயலாளராக எனது பணியை தொடங்கினேன். கடந்த 1975ஆம் ஆண்டில் பொதுக்குழு நடத்தும் குழுவில் பொருளாளராக நியமிக்கப்பட்டேன். நாடே போற்றும் தலைவராக விளங்கிய எம்ஜிஆர் 1977ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் போட்டியிட வாய்ப்பு அளித்தார். சத்தியமங்கலத்தில் போட்டியிட சொன்ன எம்ஜிஆர் என் பெயரை உச்சரி நீ வெற்றி பெறுவாய் என்று சொன்னார். ஆளுமை மக்கள் செல்வாக்கு மிக்க தலைமை தேவை என்பதை ஜெயலலிதாவை ஆதரித்தோம். திராவிடர்கள், ஆன்மீகவாதிகள் ஏற்றுக் கொள்ளும் தலைமை பண்பை பெற்றிருந்தார் ஜெயலலிதா.

55
Image Credit : our own

ஜெயலலிதாவுக்கு பிறகு முதல்வர் யார் என்ற நிலை வந்த போது எடப்பாடி பழனிச்சாமி சசிகலா தேர்வு செய்தார். அதிமுக என்ற இயக்கமும் உடைந்து விடக்கூடாது என்பதற்காக தான் ஒன்றிணைந்து பணியாற்றினோம். எனக்கு இரண்டு வாய்ப்பு கிடைத்த போதும் கட்சி உடைந்து விடக்கூடாது என இருந்தேன். அதிமுக பல்வேறு தியாகங்களை செய்து இருக்கிறேன். 2016க்கு பின் தேர்தல் களம் போராட்ட களமாக ஆகிவிட்டது என்பதை நாம் அறிவோம் என்றார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
செங்கோட்டையன்
எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved