MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சம்பளம் உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது.. யாருக்கெல்லாம் தெரியுமா?

சம்பளம் உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது.. யாருக்கெல்லாம் தெரியுமா?

Salary Hike: தமிழ்நாட்டில் கிராமப்புற தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் தூய்மைக் காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மதிப்பூதியத்தை அதிரடியாக  உயர்த்தியுள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 04 2026, 01:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கிராம ஊராட்சிகள்
Image Credit : Asianet News

கிராம ஊராட்சிகள்

தூய்மைக் காவலர்கள் என்பது தமிழ்நாட்டில் கிராம ஊராட்சிகளில் (பஞ்சாயத்துகளில்) தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களைக் குறிக்கும் பெயராகும். இவர்கள் தூய்மை பாரத் திட்டத்தின் கீழ் 150 வீடுகளுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள். ஊரகப் பகுதிகளில் குப்பை சேகரிப்பு, தெரு சுத்தம், சுகாதாரப் பராமரிப்பு போன்ற பணிகளைச் செய்கிறார்கள். இவர்களின் பணி மிக முக்கியமானது கிராமங்களை சுத்தமாகவும், நோயற்றதாகவும் வைத்திருப்பதில் இவர்களின் பங்கு பெரியது. கொரோனா காலத்தில் இவர்கள் "கண்ணுக்குத் தெரியாத அரக்கனை" எதிர்த்து முன்னணியில் பணியாற்றியவர்களாகப் போற்றப்பட்டனர்.

25
தூய்மை காவலர்
Image Credit : Asianet News

தூய்மை காவலர்

தமிழகத்தில் 12,524 கிராமப் பஞ்சாயத்துகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, 150 வீடுகளுக்கு ஒரு தூய்மை காவலர் தேவை என்ற அவுட்சோர்சிங் அடிப்படையில் 66,025 தூய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். தூய்மை காவலர்கள் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Related image1
கன்னியாகுமரி சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! நவீன 3 புதிய பயணிகள் படகு.! என்னென்ன வசதி இருக்கு தெரியுமா?
Related image2
ஜனவரியில் குஷியில் இருந்த மாணவர்களுக்கு பிப்ரவரியில் அதிர்ச்சி! வெளியான முக்கிய அறிவிப்பு!
35
திடக்கழிவு மேலாண்மையில் தூய்மை காவலர்கள்
Image Credit : Asianet News

திடக்கழிவு மேலாண்மையில் தூய்மை காவலர்கள்

சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரித்து உரமாக்குதல், நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்புதல் மற்றும் ஊராட்சிப் பகுதிகளைத் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரித்தல் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றனர். இதற்காக தூய்மைக் காவலர்களுக்கு மூன்று சக்கர வாகனங்கள், மின் வாகனங்கள், குப்பை சேகரிக்கும் தொட்டிகள் மற்றும் கையுறைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் திடக்கழிவு மேலாண்மையில் தூய்மை காவலர்களின் பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

45
ஊதியத்தை அதிகரிக்க கோரிக்கை
Image Credit : tndipr

ஊதியத்தை அதிகரிக்க கோரிக்கை

அந்த வகையில் இவர்களது மதிப்பூதியம் மிகவும் குறைவாக இருப்பதாகவும், தங்களது ஊதியத்தை அதிகரித்து தரவேண்டும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அந்த வகையில் தான் சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட அறிவிப்பில், தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக கூடுதலாக ரூ.112 கோடி ஒதுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

55
சம்பள உயர்வு
Image Credit : Google

சம்பள உயர்வு

இந்நிலையில் 5000 ரூபாய் மதிப்பூதியம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் இதனை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் 5000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன் இதற்காக ரூ.417 கோடி கூடுதல் நிதியையும் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்படுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு
சம்பளம்
சம்பள உயர்வு

Latest Videos
Recommended Stories
Recommended image1
விலை ரொம்ப கம்மி.. ஒரே நாளில் இத்தனை இடங்களா? மிஸ் பண்ணாதீங்க
Recommended image2
கன்னியாகுமரி சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! நவீன 3 புதிய பயணிகள் படகு.! என்னென்ன வசதி இருக்கு தெரியுமா?
Recommended image3
அன்புமணியை பழி வாங்கணும்..! ஆத்திரத்தில் ராமதாஸ் எடுத்த அதகள முடிவு..!
Related Stories
Recommended image1
கன்னியாகுமரி சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! நவீன 3 புதிய பயணிகள் படகு.! என்னென்ன வசதி இருக்கு தெரியுமா?
Recommended image2
ஜனவரியில் குஷியில் இருந்த மாணவர்களுக்கு பிப்ரவரியில் அதிர்ச்சி! வெளியான முக்கிய அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved